Wednesday, November 22, 2023

பாடசாலைக் கல்வி முறையில் மதிப்பீட்டுச் செயன் முறை : கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

பாடசாலைக் கல்வி முறையில் மதிப்பீட்டுச் செயன் முறை இலங்கை பாடசாலைக் கல்வி முறையில் 10175 (2018) பாடசாலைகள் பொதுக் கல்வியை 4,215,487 (2018) மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. இவர்களின் அடைவு, தேர்ச்சி மட்டத்தை அளவிடுவதற்காக பல்வேறு மதிப்பீட்டு நுட்பமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் பாடசாலை மட்ட மதிப்பீட்டின் தோற்றமும் வளர்ச்சியில் 1997 இல் அறிமுகஞ்செய்யப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தமானது பாடசாலை மட்ட கணிப்பீடு, மதிப்பீட்டுக்கு முதன்மையளித்துள்ளது. கற்றல் கற்பித்தல் செயன் முறைகளில் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீடு மதிப்பீட்டில் ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தியது. எண்ணக்கரு அறிமுகம் பாடசாலை என்பது முறைசார் ரீதியில் வடிவமைக்கப்பட்ட வரையறைக்குள் மாணவர்களின் அறிவு, ஆற்றல்களை உற்பத்தி செய்யும் இடமாக போசிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட அடைவுகளை அளவுகோள் இட்டு அளந்து பார்க்கும் ஒரு நுட்ப முறையே மதிப்பீடாகக் கருதப்படுகின்றது. இம்மதிப்பீடு பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வடிவங்களில் முன் வைத்துள்ளனர்.அந்த வகையில் “மதிப்பிடுதல் என்பது நேரடியாக சோதித்தோ, வேறு வழிகளில் அனுமானித்தோ, செயல் சோதனைகள் நடத்தியோ பெறப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மதிப்பு சார்ந்த தீர்மானமாகும். கல்விச் செயற்பட்டின் போது மேற்கொள்ளும் மதிப்பீடு வழமையாக “உருவாக்க மதிப்பீடு” எனப்படும். அது கற்றல்-கற்பித்தலை முன்னேற்றுதற்காகத் தகவல்களை அறுதியீட்டு முறையிற் பெற ஆசிரியர்களும் மாணவர்களும் மேற்கொள்ளும் செயற்பாடுகளைக் குறிக்கும். உருவாக்க மதிப்பீடு ஆசிரியர் அவதானிப்பு, வாய்மொழி வினாவுதல், வகுப்பறைக் கலந்துரையாடல், சுயவிவரப்பதிவு மதிப்பீடு, திறன் வெளிப்பாட்டு மதிப்பீடு, வீட்டு வேலையும் பரீட்சைகளும் உட்பட்ட மாணவர் பணிகளின் மதிப்பீடு என்பவற்றை உள்ளடக்குகிறது. விளைவான தகவல்கள் மாணவர்களின் தேவைகளை நிறைவாக்குமாறு கற்பித்தலையும் கற்றலையும் இணக்குவிக்கப் பயன்படும்போது, மதிப்பீடு உருவாக்க மதிப்பீடாகிறது. ‘’மதிப்பீடு என்பது நடைமுறைப்படுத்துபவரின் முடிவுகள் அடங்கிய செயல்களை திருப்தியாக உள்ளதா என ஆய்வு செய்து அதனுடைய சிறப்புகளுக்கு எதிர்பார்ப்புகளுக்கேற்ப திட்டம் மற்றும் திட்டம் சார்ந்த நோக்கங்கள் வரைவுப்படுத்துவது ஆகும்’’ - (டக்மேன் 1975) எனவே,ஏதாவது செயற்பாட்டின் வெற்றியைத் தீர்மானிக்க முறையான செயல் ஒழுங்கு மதிப்பீடு என சுருங்கக் கூறலாம். இச்செயல் ஒழுங்கை பாடசாலை மட்டத்தில் செயற்படுத்துவது பாடசாலை மட்ட மதிப்பீட்டுச் செயன் முறை எனலாம். கல்விச் செய்பாடுகளுள் பல்வேறு பண்புகளை அளப்பதற்கு பல அளவீட்டு உபகரணங்கள் (கரசித்திப்படுகின்றன.கல்வி அளவீட்டுக்குப் பயன்படுத்தபடும் மாணவர் அடைவு , பாட அடைவ , திறன்கள் மனப்பங்ககள், என பலவிடயங்கள் அளவிடப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. பாடசாலை மட்ட மதிப்பீட்டு வடிவங்கள் பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் மதிப்பீட்டுப் பணிகளை நாம் பின்வருமாறு அடையாளப்படுத்தலாம். 1.தவணை மதிப்பீட 2.இறுதியாண்டு மதிப்பீடு 3.கற்றல் -கற்பித்தல் மதிப்பீடு 4.பண்பு சார் மதிப்பீடு இவை ஆசிரியர் சார்பாகவும், மாணவர் சார்பாகவும், பாடசாலை சார்பாகவும் இடம்பெறும் மதிப்பீடுகள் ஆகும். இவற்றில் கற்றல் கற்பித்தல் தொடர்பான அடைவு மட்ட மதிப்பீடுகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பாடசாலை மட்ட மதிப்பீடுகள் இடையீட்டு மதிப்பீடு, தெடர் மதிபபீடு, இறுதிமதிப்பீடு என நியம அடிப்படையிலும் ,நியதி அடிப்படையிலும் பாடசாலை மட்டத்தில் மதிப்பீடுகள் இடம்பெற்று வருகின்றன. 1994இல் தே.க.நிறுவகத்தினைச் சேர்ந்த மதிப்பீட்டுக் கிளையினர் மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளில் இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகஞ் செய்யப்பட்டது. 1995இல் மேலும் 20 பாடசாலையும், 1998இல் 1998/04 சுற்றறிக்கைபடி அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்தது. அத்துடன் 2002இல் ஓ.எல்.பெறுபேற்றிலும் சேர்க்கப்பட்டது. என்றாலும், மாணவர் அடைவு எழுத்துப் பரீட்சை மூலம் மட்டுமே மதிப்பீ;;டு செய்யப்பட்டது. இது அரையாண்டுப் பரீட்சை, இறுதியாண்டுப் பரீட்சை எனவும் தற்போது நடைமுறையில் முதலாம் தவணை, இரண்டாம் தவணை, மூன்றாம் தவணை பரீட்சைகள் என பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மதிப்பீடு செய்வதற்கான நோக்கங்கள் :- 1. மதிப்பீடு வழிமுறைகளை அறிவுறுத்துகிறது. 2. மதிப்பீடு இயக்க கற்றல் 3. மதிப்பீடு மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிவிக்கின்றனர். 4. மதிப்பீடு கற்பித்தல் பயிற்சியை அளிக்கிறது. மதிப்பீட்டின் முக்கிய பணிகள 1. மாணவர்களின் நேரம் மற்றும் கவனத்தைக் கவருதல். 2. மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் செயல்பாடுகளை உருவாக்குதல். 3. மாணவர்கள் மீது கவனம் செலுத்தி தேவையான நேரத்தில் போதிய பின்விளைவுகளை வழங்குதல். 4. மாணவர்களிடையே வேறுபடுத்தக்கூடிய தரம் (அ) மதிப்பெண்கள் (அ) தேர்வில் தேர்ச்சி / தோல்வியின் முடிவுகளை கொண்டு தீர்மானங்களை செயல்படுத்தல். 5. மாணவர்களின் தரநிலை மற்றும் கருத்துரையை உட்புறப்படுத்த மாணவர்களுக்கு உதவுதல். கிப்ஸ் (2003) இம்திப்பீட்டு முறைகளின் முக்க்pயத்துவத்தை நோக்குவோமாயின் 1. மாணவர்களின் கற்றல் விருத்தி பற்றிய சரியான தீர்மானங்களுக்கு வரமுடியும் 2. மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறியவும் விசாரிக்கவும் உதவுதல் 3. கலைத்திட்டம், கற்பித்தல் நடைமுறைகள், கற்பித்தல் உபகரணங்கள், கல்வி நிருவாகம், முகாமைத்துவ முறைமை ,கல்விச் செயற்திட்டங்கள் போன்வற்றின் விளைதிறன்களைக் கண்டறிய முக்கியத்துவம் பெறுகின்றது. 4. நாட்டில் நடைமுறையில் உள்ள கல்வி முறையுடன் தொடர்பான பிரச்சினைகளை,குறைபாடுகளை கண்டறிந்து அவற்றுக்குப்பதிலாக பரிகாரங்களை மேற்கொள்ளக் கூடிய கல்விக் கொள்கைகளை வகுப்பதற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் பயன்மிக்கதாக இருக்கும். திட்டமிடவும், அறிவுறுத்தி வழிகாட்டவும் உட்காட்சி மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் புரிதலின்படி வழிகாட்டவும், திட்டமிடவும் மேலும் போதிய பின்னூட்டத்தை வழங்கவும் மதிப்பீடு ஆசிரியர்களுக்கு பயன்படுகிறது. கலைத்திட்டத்தின் உள்ளடக்கம், தேர்ச்சி ஆகியவற்றுக்கேற்ப தயாரிக்கப்பட்ட நியதிகளை மாணவர்கள் அடைந்துள்ளனரா என்பதைப் பரீட்சித்தல் நியதி அடிப்படையிலான கணிப்பீடாகும். பெரும்பாலும் பாடசாலைகளில் 1. தவணைப் பரீட்சை 2. அலகுப் பரீட்சை 3. பாடசாலை மட்டக் கணிப்பீடு என்பன தொடர்ச்சியாக மேற் கொள்ளப்படுகின்றன. அவை பற்றிய பதிவுகள் பேணப்படுகின்றன. மாணவர்களுக்கும் சகல பாடசாலைகளிலும் தவணைப்பரீட்சை முடிவுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில பாடசாலைகளில் அலகுப் பரீட்சைகளின் பெறுபேறுகளை பிள்ளைகளுக்கு அட்டவணையாகவோ பதிவாகவோ வழங்குகின்றர்கள். சில பாடசாலைகளில் அலகுப் பரீட்சைகளின் பெறுபேறுகளை தேர்ச்சி அறிக்கையாகவே வழங்குகின்றார்கள். எனினும் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடசாலை மட்டக் கணிப்பீடு தொடர்பான அடைவுகள் பதிவுகளாக வழங்கப்படுவதில்லை. பாடசாலை மட்டக் கணிப்பீடு இலங்கையில் பாடசாலைகளில் அமுல்ப்படுத்தும் முன்னதாக தவணைப் பரீட்சைகளின் தேர்ச்சி அறிக்கை மாணவர்களது கற்றல் அடைவுகளில் பாரிய தாக்கத்தையும் ஒரு வித பயத்தையும் கொண்டமைந்திருந்தது. இன்று தரம் 1 முதல் 11 வரை பாடசாலைகளில் மாணவர் வகுப்பு ஏற்றங்கள் என்பன தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சகல பாடங்களிலும் நூறு புள்ளிகளைப் பெற்ற மாணவனும் எல்லாப் பாடங்களிலும் மொத்தமாக நூறு புள்ளிகளைப் பெற்ற மாணவனும் சித்தியடைய எவ்விதத் தடையுமில்லை. இதுவும் அடைவு மட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாமைக்கான ஒரு காரணமாக ஆசிரியர்கள் முன் வைக்கும் விடயமாக அமைகின்றது. தவணைப் பரீட்சை பெறுபேறுகளில் கடந்த காலங்களில் பேணப்பட்டு வந்த சித்தியடைந்தார்/சித்தியடையவில்லை என்ற வரிகள் தற்போது இல்லாமல் இருப்பதுவும் கற்றல் அடைவுகளை எளிமைக்குட்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகின்றது.. மாணவர் உரிமை, மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் காரணமாக பரீட்சைகள் தொடர்பான செயற்பாடுகள் தரம் 1 தொடக்கம் 10 வரை முன்னெடுக்கப்பட்டாலும் தரம் 11 இல் க.பொ.த சாதாரண தரத்தில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வைக்கப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையிலும் பாடசாலை மட்டக் கணிப்பீடுகளின் துணையோடு மாணவர்கள் சித்தியடைவதாகக் கருதப்பட்டாலும் பல மாணவர்கள் தேவையான பெறுபேற்றை உரிய முறையில் அடையாமல் திண்டாடுவதையம் அதனால் விரக்திக்குச் செல்லும் நிலையையும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினூடாக வெளிவரும் செய்திகளும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. OL பரீட்சை, இடைநிலைக் கல்வியின் முடிவில் மாணவர்களின் பாடவாரி அடைவுகட்குச் சான்றளிக்கும் நோக்குடனிருந்தது. இப் பரீட்சையின் பின் சில மாணவர்கள் பாடசாலை நீங்குவர். மற்றோர், AL இல் தமது கல்வியைத் தொடரத் தகுதி பெறவேண்டும் பாடசாலையிற் 11 ஆண்டுகள் கற்றும் இப் பரீட்சையிற் பல சிறார் எல்லாப் பாடங்களிலும் தவறுவது கவலைக்குரிய ஒரு விடயமாகும். இன்னுங் கவலைக்குரியது ஏதெனில், கட்டாய பாடமான கணிதத்தில் தவறுவோரின் வீதம் அதிகமாயிருப்பதாகும். AL பரீட்சை இரு நோக்கங்களை நிறைவேற்றுகிறது: மூத்த இடைநிலைக் கட்டத்திற் பாடசாலைக் கல்வியின் முடிவில், திறன் வெளிப்பாட்டை அளப்பதுடன் பல்கலைக்கழகங்கட்கு மாணவர்களைத் தெரிதற்கான அடிப்படையாகவும் உள்ளது. பல்கலைக்கழக அனுமதிகள் போட்டி மிக்கன. மாணவரெவருதும் எதிர்காலம் இப் பரீட்சையில் அவருடைய செயற்திறனிற் தங்கியுள்ளது. இதனால், மாணவர்கள் உருப்போட முற்படுகின்றனர். பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தமாக்கத் தனிப்போதனை நிறுவன ஆசிரியர்கள் மீண்டும் குறுக்கிடுகின்றனர். இந்த உச்சமான போட்டி சமூக நலமற்றது. எனவே தேர்வுநாடுவோரை பல்கலைக்கழக அனுமதிக்குத் தெரிய மாற்றுப் பொறிமுறை ஒன்று அவசியம். கடுமையான பரீட்சை மையமாதலும் பொதுப் பரீட்சைகள் மூலம் மதிப்பிடுவதன்; குறைபாடுகளும் சிறாரின் ஒட்டுமொத்த விருத்தியைப் பாதகமாகப் பாதித்துள்ளன. பாடசாலைகளில், மாணவர்களை வினாத்தாள்கட்கு விடையெழுத ஆயத்தப்படுத்துவதாகக் கற்பித்தல் ஒடுங்கியுள்ளது. மாணவர்கள் இணை-கலைத்திட்டச் செயற்பாடுகளையும் சமூகச் செயற்பாடுகளையும் பாடசாலையிலும் வீட்டிலும் சமூகத்திலும் புறக்கணித்துப் பயிற்றல் வகுப்பிற்குப் போகையில், மாணவரின் ஆளுமை விருத்தி மாணவர்களாலும் பெற்றோராலும் கவனிக்கப்படாதுள்ளது அல்லது அறவே புறக்கணிக்கப்படுகிறது. இதன் பயனாகத், தேசிய கல்வி ஆணைக்குழு வரையறுத்த பரந்த இலக்குகளும் குறிக்கோள்களும் எதிர்நோக்கும் சிறாரின் ஒட்டுமொத்த விருத்தியை உறுதிப்படுத்தப் பாடசாலை முறைமை தவறியுள்ளது. பொதுவாகப் பயன்படும் தரப்படுத்திய பரீட்சைகளான கட்டுரை வகை, பல-தெரிவு வகை, பொருத்துதல் என்பன ‘நாயை ஆட்டும் வால்’ போல கலைத்திட்டத்துக்கு ஆணையிடுகின்றன. இப் பரீட்சைகள் போயொழியும் வரை, மாணவர்களை எதிர்காலத்திற்கு ஆயத்தமாக்க எத் திறன்களைக் கற்பிக்க வேண்டுமென ஆசிரியர்கட்கு விளங்காது. எனவே, வகுப்பறை மதிப்பீடுகள் எதிர்காலத்தில் மாணவர்கட்குத் தேவைப்படும் ஆற்றல்களுடன் இணங்குவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தவேண்டும். நம்பகமான, திறன் வெளிப்பாட்டு அடிப்படையிலான அளவுகோல்களைக் கொண்ட வகுப்பறை-மதிப்பீடுகளின் ‘புதிய அலையின்’ ஒரு பகுதியாக ஆசிரியர்கள் அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம் மதிப்பீட்டு முறைகள், வழமையான சோதனைகளை மட்டுங் கொண்டிராது, பிரச்சினை தீர்ப்பதிலும் தகவல்களைப் பகுத்தாய்ந்து தொகுத்தலிலும் மாணவர்கள் தமது திறன்களைப் புலப்படுத்துவதைக் கோரும் புதிய வழக்குமுறைகளையும் உள்ளடக்க வேண்டும். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் , கனடா, ஸ்கன்டினேவிய நாடுகள், அவுஸ்திரேலியா போன்ற விருத்திபெற்ற நாடுகள் பாடசாலை மதிப்பீட்டு, கணிப்பீட்டு நடைமுறையைப் பலப்படுத்த நம்பகமான மதிப்பீட்டுச் செயற்பாடுகளைப் பயன்படுத்துகின்றன. நம்பகமான மதிப்பீட்டின் பின்னுள்ள சிந்தனை ஏதெனின், பாடசாலைக்கு வெளியேயுள்ள வாழ்க்கைக்கு அதிகம் பொருந்தும் முறைகளில் மாணவர்கள் தமது அறிவைப் புலப்படுத்தச் செய்வதாகும். துயார்படுத்திய சோதனைகள் அடைவு மதிப்பீட்டில் ஒரு பாகத்தை வகித்தாலும், நம்பகமான மதிப்பீடு வேறு நன்மைகளையுந் தருகிறது. பாரம்பரிய மதிப்பீடுகளில் கற்பித்தல், மாணவர்களைச் சோதனைக்கு ஆயத்தப்படுத்தற்கு வரையப்பட்டுள்ளது. கல்விச் செய்முறையின் போது மாணவரொருவர் பெற்ற அறிவையும் திறன்களையும் பிரயோகித்து நிஜ உலகப்பணிகளை நிறைவேற்றலில் அம் மாணவரின் தேர்ச்சியை நம்பகமான மதிப்பீட்டு முறை மதிப்பிடுகிறது. ஒப்படை எழுதுதல், தனிப்பட்ட அல்லது கூட்டுத் திட்டங்கள், சுயவிவரப்பதிவு, ஆசிரியர் அவதானிப்புகள், திறன் வெளிப்பாடு அல்லது புலப்படுத ;தல் மதிப்பீடு, திறனுக்குச் சான்றுகூறும் பிற செயற்பாடுகள் ஆகியவற்றை நம்பகமான மதிப்பீடு உள்ளடக்கலாம். இலங்கை பாடசாலைக் கல்வி முறையில் 10175 (2018) பாடசாலைகள் பொதுக் கல்வியை 4,215,487 (2018) மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. இவர்களின் அடைவு, தேர்ச்சி மட்டத்தை அளவிடுவதற்காக பல்வேறு மதிப்பீட்டு நுட்பமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் பாடசாலை மட்ட மதிப்பீட்டின் தோற்றமும் வளர்ச்சியில் 1997 இல் அறிமுகஞ்செய்யப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தமானது பாடசாலை மட்ட கணிப்பீடு, மதிப்பீட்டுக்கு முதன்மையளித்துள்ளது. கற்றல் கற்பித்தல் செயன் முறைகளில் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீடு மதிப்பீட்டில் ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தியது. எண்ணக்கரு அறிமுகம் பாடசாலை என்பது முறைசார் ரீதியில் வடிவமைக்கப்பட்ட வரையறைக்குள் மாணவர்களின் அறிவு, ஆற்றல்களை உற்பத்தி செய்யும் இடமாக போசிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட அடைவுகளை அளவுகோள் இட்டு அளந்து பார்க்கும் ஒரு நுட்ப முறையே மதிப்பீடாகக் கருதப்படுகின்றது. இம்மதிப்பீடு பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வடிவங்களில் முன் வைத்துள்ளனர்.அந்த வகையில் “மதிப்பிடுதல் என்பது நேரடியாக சோதித்தோ, வேறு வழிகளில் அனுமானித்தோ, செயல் சோதனைகள் நடத்தியோ பெறப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மதிப்பு சார்ந்த தீர்மானமாகும் (ஏயடரந துரனபநஅநவெ) கல்விச் செயற்பாட்டின் போது மேற்கொள்ளும் மதிப்பீடு வழமையாக “உருவாக்க மதிப்பீடு” எனப்படும். அது கற்றல்-.கற்பித்தலை முன்னேற்றுதற்காகத் தகவல்களை அறுதியீட்டு முறையிற் பெற ஆசிரியர்களும் மாணவர்களும் மேற்கொள்ளும் செயற்பாடுகளைக் குறிக்கும். உருவாக்க மதிப்பீடு ஆசிரியர் அவதானிப்பு, வாய்மொழி வினாவுதல், வகுப்பறைக் கலந்துரையாடல், சுயவிவரப்பதிவு மதிப்பீடு, திறன் வெளிப்பாட்டு மதிப்பீடு, வீட்டு வேலையும் பரீட்சைகளும் உட்பட்ட மாணவர் பணிகளின் மதிப்பீடு என்பவற்றை உள்ளடக்குகிறது. விளைவான தகவல்கள் மாணவர்களின் தேவைகளை நிறைவாக்குமாறு கற்பித்தலையும் கற்றலையும் இணக்குவிக்கப் பயன்படும்போது, மதிப்பீடு உருவாக்க மதிப்பீடாகிறது. ‘’மதிப்பீடு என்பது நடைமுறைப்படுத்துபவரின் முடிவுகள் அடங்கிய செயல்களை திருப்தியாக உள்ளதா என ஆய்வு செய்து அதனுடைய சிறப்புகளுக்கு எதிர்பார்ப்புகளுக்கேற்ப திட்டம் மற்றும் திட்டம் சார்ந்த நோக்கங்கள் வரைவுப்படுத்துவது ஆகும்’’ - டக்மேன் 1975 எனவே,ஏதாவது செயற்பாட்டின் வெற்றியைத் தீர்மானிக்க முறையான செயல் ஒழுங்கு மதிப்பீடு என சுருங்கக் கூறலாம். இச்செயல் ஒழுங்கை பாடசாலை மட்டத்தில் செயற்படுத்துவது பாடசாலை மட்ட மதிப்பீட்டுச் செயன் முறை எனலாம். கல்விச் செய்பாடுகளுள் பல்வேறு பண்புகளை அளப்பதற்கு பல அளவீட்டு உபகரணங்கள் (கருவிகள்) பயன்படு;த்தப்படுகின்றன.கல்வி அளவீட்டுக்குப் பயன்படுத்தபடும் மாணவர் அடைவு , பாட அடைவ , திறன்கள் மனப்பங்ககள், என பலவிடயங்கள் அளவிடப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. பாடசாலை மட்ட மதிப்பீட்டு வடிவங்கள் பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் மதிப்பீட்டுப் பணிகளை நாம் பின்வருமாறு அடையாளப்படுத்தலாம். 1.தவணை மதிப்பீட 2.இறுதியாண்டு மதிப்பீடு 3.கற்றல் -கற்பி;த்தல் மதிப்பீடு 4.பண்பு சார் மதிப்பீடு இவை ஆசிரியர் சார்பாகவும், மாணவர் சார்பாகவும், பாடசாலை சார்பாகவும் இடம்பெறும் மதிப்பீடுகள் ஆகும். இவற்றில் கற்றல் கற்பித்தல் தொடர்பான அடைவு மட்ட மதிப்பீடுகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பாடசாலை மட்ட மதிப்பீடுகள். இடையீட்டு மதிப்பீடு, தெடர் மதிபபீடு, இறுதிமதிப்பீடு என நியம அடிப்படையிலும்; நியதி அடிப்படையிலும் பாடசாலை மட்டத்தில் மதிப்பீடுகள் இடம்பெற்று வருகின்றன. 1994இல் தே.க.நிறுவகத்தினைச் சேர்ந்த மதிப்பீட்டுக் கிளையினர் மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளில் இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகஞ் செய்யப்பட்டது. 1995இல் மேலும் 20 பாடசாலையும், 1998இல் 1998/04 சுற்றறிக்கைபடி அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்தது. அத்துடன் 2002இல் ஓ.எல்.பெறுபேற்றிலும் சேர்க்கப்பட்டது. என்றாலும், மாணவர் அடைவு எழுத்துப் பரீட்சை மூலம் மட்டுமே மதிப்பீ;;டு செய்யப்பட்டது. இது அரையாண்டுப் பரீட்சை, இறுதியாண்டுப் பரீட்சை எனவும் தற்போது நடைமுறையில் முதலாம் தவணை, இரண்டாம் தவணை, மூன்றாம் தவணை பரீட்சைகள் என பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மதிப்பீடு செய்வதற்கான நோக்கங்கள் :- 1. மதிப்பீடு வழிமுறைகளை அறிவுறுத்துகிறது. 2. மதிப்பீடு இயக்க கற்றல் 3. மதிப்பீடு மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிவிக்கின்றனர். 4. மதிப்பீடு கற்பித்தல் பயிற்சியை அளிக்கிறது. மதிப்பீட்டின் முக்கிய பணிகள 1. மாணவர்களின் நேரம் மற்றும் கவனத்தைக் கவருதல். 2. மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் செயல்பாடுகளை உருவாக்குதல். 3. மாணவர்கள் மீது கவனம் செலுத்தி தேவையான நேரத்தில் போதிய பின்விளைவுகளை வழங்குதல். 4. மாணவர்களிடையே வேறுபடுத்தக்கூடிய தரம் (அ) மதிப்பெண்கள் (அ) தேர்வில் தேர்ச்சி ஃ தோல்வியின் முடிவுகளை கொண்டு தீர்மானங்களை செயல்படுத்தல். 5. மாணவர்களின் தரநிலை மற்றும் கருத்துரையை உட்புறப்படுத்த மாணவர்களுக்கு உதவுதல். கிப்ஸ் (2003) இம்திப்பீட்டு முறைகளின் முக்க்pயத்துவத்தை நோக்குவோமாயின் 1. மாணவர்களின் கற்றல் விருத்தி பற்றிய சரியான தீர்மானங்களுக்கு வரமுடியும் 2. மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறியவும் விசாரிக்கவும் உதவுதல் 3. கலைத்திட்டம், கற்பித்தல் நடைமுறைகள், கற்பித்தல் உபகரணங்கள், கல்வி நிருவாகம், முகாமைத்துவ முறைமை ,கல்விச் செயற்திட்டங்கள் போன்வற்றின் விளைதிறன்களைக் கண்டறிய முக்கியத்துவம் பெறுகின்றது. 4. நாட்டில் நடைமுறையில் உள்ள கல்வி முறையுடன் தொடர்டபான பிரச்சினைகளை,குறைபாடகளை கண்டறிந்து அவற்றுக்குப்பதிலாக பரிகாரங்களை மேற்கொள்ளக் கூடிய கல்விக் கொள்கைகளை வகுப்பதற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் பயன்மிக்கதாக இருக்கும். திட்டமிடவும், அறிவுறுத்தி வழிகாட்டவும் உட்காட்சி மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் புரிதலின்படி வழிகாட்டவும், திட்டமிடவும் மேலும் போதிய பின்னூட்டத்தை வழங்கவும் மதிப்பீடு ஆசிரியர்களுக்கு பயன்படுகிறது. கலைத்திட்டத்தின் உள்ளடக்கம், தேர்ச்சி ஆகியவற்றுக்கேற்ப தயாரிக்கப்பட்ட நியதிகளை மாணவர்கள் அடைந்துள்ளனரா என்பதைப் பரீட்சித்தல் நியதி அடிப்படையிலான கணிப்பீடாகும். பெரும்பாலும் பாடசாலைகளில் 1. தவணைப் பரீட்சை 2. அலகுப் பரீட்சை 3. பாடசாலை மட்டக் கணிப்பீடு என்பன தொடர்ச்சியாக மேற் கொள்ளப்படுகின்றன. அவை பற்றிய பதிவுகள் பேணப்படுகின்றன. மாணவர்களுக்கும் சகல பாடசாலைகளிலும் தவணைப்பரீட்சை முடிவுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில பாடசாலைகளில் அலகுப் பரீட்சைகளின் பெறுபேறுகளை பிள்ளைகளுக்கு அட்டவiணாயாகவோ பதிவாகவோ வழங்குகின்றர்கள். சில பாடசாலைகளில் அலகுப் பரீட்சைகளின் பெறுபேறுகளை தேர்ச்சி அறிக்கையாகவே வழங்குகின்றார்கள். எனினும் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடசாலை மட்டக் கணிப்பீடு தொடர்பான அடைவுகள் பதிவுகளாக வழங்கப்படுவதில்லை. பாடசாலை மட்டக் கணிப்பீடு இலங்கையில் பாடசாலைகளில் அமுல்ப்படுத்தும் முன்னதாக தவணைப் பரீட்சைகளின் தேர்ச்சி அறிக்கை மாணவர்களது கற்றல் அடைவுகளில் பாரிய தாக்கத்தையும் ஒரு வித பயத்தையும் கொண்டமைந்திருந்தது. இன்று தரம் 1 முதல் 11 வரை பாடசாலைகளில் மாணவர் வகுப்பு ஏற்றங்கள் என்பன தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சகல பாடங்களிலும் நூறு புள்ளிகளைப் பெற்ற மாணவனும் எல்லாப் பாடங்களிலும் மொத்தமாக நூறு புள்ளிகளைப் பெற்ற மாணவனும் சித்தியடைய எவ்விதத் தடையுமில்லை. இதுவும் அடைவு மட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாமைக்கான ஒரு காரணமாக ஆசிரியர்கள் முன் வைக்கும் விடயமாக அமைகின்றது. தவணைப் பரீட்சை பெறுபேறுகளில் கடந்த காலங்களில் பேணப்பட்டு வந்த சித்தியடைந்தார்ஃ சித்தியடையவில்லை என்ற வரிகள் தற்போது இல்லாமல் இருப்பதுவும் கற்றல் அடைவுகளை எளிமைக்குட்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகின்றது.. மாணவர் உரிமை, மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் காரணமாக பரீட்சைகள் தொடர்பான செயற்பாடுகள் தரம் 1 தொடக்கம் 10 வரை முன்னெடுக்கப்பட்டாலும் தரம் 11 இல் க.பொ.த சாதாரண தரத்தில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வைக்கப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையிலும் பாடசாலை மட்டக் கணிப்பீடுகளின் துணையோடு மாணவர்கள் சித்தியடைவதாகக் கருதப்பட்டாலும் பல மாணவர்கள் தேவையான பெறுபேற்றை உரிய முறையில் அடையாமல் திண்டாடுவதையம் அதனால் விரக்திக்குச் செல்லும் நிலையையும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினூடாக வெளிவரும் செய்திகளும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. பு.ஊ.நு. ழு-டு பரீட்சை, இடைநிலைக் கல்வியின் முடிவில் மாணவர்களின் பாடவாரி அடைவுகட்குச் சான்றளிக்கும் நோக்குடனிருந்தது. இப் பரீட்சையின் பின் சில மாணவர்கள் பாடசாலை நீங்குவர். மற்றோர், பு.ஊ.நு. யு-டுஇல் தமது கல்வியைத் தொடரத் தகுதி பெறவேண்டும் பாடசாலையிற் 11 ஆண்டுகள் கற்றும் இப் பரீட்சையிற் பல சிறார் எல்லாப் பாடங்களிலும் தவறுவது கவலைக்குரிய ஒரு விடயமாகும். இன்னுங் கவலைக்குரியது ஏதெனில், கட்டாய பாடமான கணிதத்தில் தவறுவோரின் வீதம் அதிகமாயிருப்பதாகும். AL பரீட்சை இரு நோக்கங்களை நிறைவேற்றுகிறது: மூத்த இடைநிலைக் கட்டத்திற் பாடசாலைக் கல்வியின் முடிவில், திறன் வெளிப்பாட்டை அளப்பதுடன் பல்கலைக்கழகங்கட்கு மாணவர்களைத் தெரிதற்கான அடிப்படையாகவும் உள்ளது. பல்கலைக்கழக அனுமதிகள் போட்டி மிக்கன. மாணவரெவருதும் எதிர்காலம் இப் பரீட்சையில் அவருடைய செயற்திறனிற் தங்கியுள்ளது. இதனால், மாணவர்கள் உருப்போட முற்படுகின்றனர். பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தமாக்கத் தனிப்போதனை நிறுவன ஆசிரியர்கள் மீண்டும் குறுக்கிடுகின்றனர். இந்த உச்சமான போட்டி சமூக நலமற்றது. எனவே தேர்வுநாடுவோரை பல்கலைக்கழக அனுமதிக்குத் தெரிய மாற்றுப் பொறிமுறை ஒன்று அவசியம். கடுமையான பரீட்சை மையமாதலும் பொதுப் பரீட்சைகள் மூலம் மதிப்பிடுவதன்; குறைபாடுகளும் சிறாரின் ஒட்டுமொத்த விருத்தியைப் பாதகமாகப் பாதித்துள்ளன. பாடசாலைகளில், மாணவர்களை வினாத்தாள்கட்கு விடையெழுத ஆயத்தப்படுத்துவதாகக் கற்பித்தல் ஒடுங்கியுள்ளது. மாணவர்கள் இணை-கலைத்திட்டச் செயற்பாடுகளையும் சமூகச் செயற்பாடுகளையும் பாடசாலையிலும் வீட்டிலும் சமூகத்திலும் புறக்கணித்துப் பயிற்றல் வகுப்பிற்குப் போகையில், மாணவரின் ஆளுமை விருத்தி மாணவர்களாலும் பெற்றோராலும் கவனிக்கப்படாதுள்ளது அல்லது அறவே புறக்கணிக்கப்படுகிறது. இதன் பயனாகத், தேசிய கல்வி ஆணைக்குழு வரையறுத்த பரந்த இலக்குகளும் குறிக்கோள்களும் எதிர்நோக்கும் சிறாரின் ஒட்டுமொத்த விருத்தியை உறுதிப்படுத்தப் பாடசாலை முறைமை தவறியுள்ளது. பொதுவாகப் பயன்படும் தரப்படுத்திய பரீட்சைகளான கட்டுரை வகை, பல-தெரிவு வகை, பொருத ;துதல் என்பன ‘நாயை ஆட்டும் வால்’ போல கலைத்திட்டத்துக்கு ஆணையிடுகின்றன. இப் பரீட்சைகள் போயொழியும் வரை, மாணவர்களை எதிர்காலத்திற்கு ஆயத்தமாக்க எத் திறன்களைக் கற்பிக்க வேண்டுமென ஆசிரியர்கட்கு விளங்காது. எனவே, வகுப்பறை மதிப்பீடுகள் எதிர்காலத்தில் மாணவர்கட்குத் தேவைப்படும் ஆற்றல்களுடன் இணங்குவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தவேண்டும். நம்பகமான, திறன் வெளிப்பாட்டு அடிப்படையிலான அளவுகோல்களைக் கொண்ட வகுப்பறை-மதிப்பீடுகளின் ‘புதிய அலையின்’ ஒரு பகுதியாக ஆசிரியர்கள் அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம் மதிப்பீட்டு முறைகள், வழமையான சோதனைகளை மட்டுங் கொண்டிராது, பிரச்சினை தீர்ப்பதிலும் தகவல்களைப் பகுத்தாய்ந்து தொகுத்தலிலும் மாணவர்கள் தமது திறன்களைப் புலப்படுத்துவதைக் கோரும் புதிய வழக்குமுறைகளையும் உள்ளடக்க வேண்டும். ஐக்கிய அமெரிக்கா ,ஐக்கிய இராச்சியம் , கனடா, ஸ்கன்டினேவிய நாடுகள், அவுஸ்திரேலியா போன்ற விருத்திபெற்ற நாடுகள் பாடசாலை மதிப்பீட்டு, கணிப்பீட்டு நடைமுறையைப் பலப்படுத்த நம்பகமான மதிப்பீட்டுச் செயற்பாடுகளைப் பயன்படுத்துகின்றன. நம்பகமான மதிப்பீட்டின் பின்னுள்ள சிந்தனை ஏனெனில், பாடசாலைக்கு வெளியேயுள்ள வாழ்க்கைக்கு அதிகம் பொருந்தும் முறைகளில் மாணவர்கள் தமது அறிவைப் புலப்படுத்தச் செய்வதாகும். துயார்படுத்திய சோதனைகள் அடைவு மதிப்பீட்டில் ஒரு பாகத்தை வகித்தாலும், நம்பகமான மதிப்பீடு வேறு நன்மைகளையுந் தருகிறது. பாரம்பரிய மதிப்பீடுகளில் கற்பித்தல், மாணவர்களைச் சோதனைக்கு ஆயத்தப்படுத்தற்கு வரையப்பட்டுள்ளது. கல்விச் செய்முறையின் போது மாணவரொருவர் பெற்ற அறிவையும் திறன்களையும் பிரயோகித்து நிஜ உலகப்பணிகளை நிறைவேற்றலில் அம் மாணவரின் தேர்ச்சியை நம்பகமான மதிப்பீட்டு முறை மதிப்பிடுகிறது. ஒப்படை எழுதுதல், தனிப்பட்ட அல்லது கூட்டுத் திட்டங்கள், சுயவிவரப்பதிவு, ஆசிரியர் அவதானிப்புகள், திறன் வெளிப்பாடு அல்லது புலப்படுத ;தல் மதிப்பீடு, திறனுக்குச் சான்றுகூறும் பிற செயற்பாடுகள் ஆகியவற்றை நம்பகமான மதிப்பீடு உள்ளடக்கலாம். உங்கள் தேடலுக்கு எனது நன்றி கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

ஸ்ரீ ராமரின் 68 தலைமுறை முன்னோர்களை எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

ரீ ராமரின் 68 தலைமுறை முன்னோர்களை....... 1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4. விவஸ்வானின் மகன்- மனு 5. மனுவின் மகன் -இஷ்வாகு 6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி 7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா 8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா 9. அணரன்யாவின் மகன் -ப்ருது 10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா 11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா 12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட் 14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா 15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா 16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா 17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத் 18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா 19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப் 20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா 21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா 22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத் 23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2 24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா 25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா 26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா 27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு 28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத் 29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2 30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா 31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2 32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான் 33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா 34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா 35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு 36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன் 37. ஹரிசந்திரனின் மகன் ரோஹிதாஷ்வா 38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித் 39. ஹரித்தின் மகன் -சன்சு 40. சன்சுவின் மகன் -விஜய் 41. விஜயின் மகன் -ருருக் 42. ருருக்கின் மகன் -வ்ருகா 43. வ்ருகாவின் மகன் -பாஹு 44. பாஹுவின் மகன்- சாஹாரா 45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன் 46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன் 47. அன்ஷுமனின் மகன் -திலீபன் 48. திலீபனின் மகன்- பகீரதன் 49. பகீரதனின் மகன் -ஷ்ருத் 50. ஷ்ருத்தின் மகன் -நபக் 51. நபக்கின் மகன்- அம்பரீஷ் 52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப் 53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு 54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா 55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா 56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ் 57. ஸூதஸின் மகன் -மித்ரஷா 58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2 59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3 60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா 61. நிக்னாவின் மகன்- ரகு 62. ரகுவின் மகன் -துலிது 63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன் 64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2 65. ரகுவின் மகன் - அஜன் 66. அஜனின் மகன் - தசரதன் 67. தசரதனின் மகன் 68. **ஸ்ரீ ரகு ராமன்** இப்படி 68 பரம்பரை கொண்டது ஸ்ரீ ராமரின் தலைமுறை ஸ்ரீ ராமரின் குல வம்சத்தை பற்றி அறிவதே பெரிய பாக்யம். ஜெய் ஸ்ரீ ராம். நமக்கெல்லாம் நம்முடைய 3 தலைமுறை தெரிந்தாலே பெரிய விஷயம். ஜெய் ஸ்ரீ ராம். இதில் நாங்கள் மரீசி மகரிஷியின் கோத்திரத்தில் பிறந்தவர்கள் ஏழு தலைமுறையாக மொத்த குடும்ப உறுப்பினர்கள் பெயரையும் எழுதி வைத்து வருகிறோம் உங்கள் தேடலுக்கு எனது நன்றி எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

ஆசிரியர்களின் வாண்மை விருத்தி : கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

இலங்கையின் மிகப்பெரிய ஒழுங்கமைப்பாகப் பாடசாலைகளையே கருதமுடியும். அவ்வாறான பாடசாலைகளில் மிக உயர்ந்த மனித வளமாக விளங்குபவர்கள் ஆசிரியர்களாவர். ஆசிரியர்களை ஊக்குவிப்பது தொடர்பான காரணிகள் சிலவற்றை முன்வைத்துள்ளார் என்றும் அவற்றுள் மேற்பார்வைசெய்தல் என்பது ஒரு காரணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியரும் வாண்மையும் ஆசிரியத்துவம் என்பது தெளிசிந்தனையை அடிப்படையாகக்கொண்டது, ஆக்கசிந்தனையைப் பேணிவளர்ப்பது, பகுத்தறிவுபூர்வமான முடிவுகளை நோக்கி நகரவைப்பது, சகிப்புத்தன்மையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது, மாணவர்கள் கற்றலுக்காகத் தாமதித்த நேரங்கள் பற்றி கவலைகொள்வது, தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பது, வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் வழங்கும் ஆற்றலைக் கொண்டிருப்பது சமூக முன்னேற்றத்திற்கு உதவுவது, நல்லிணக்க மேம்பாட்டிற்கு உதவுவது, மனிதவள மேம்பாட்டிற்கு மனித வளத்தைப் பயன்படுத்தும் நிலைக்குத் திட்டமிடுவது என்று பலவாறு எடுத்துரைக்கலாம். ஆசிரியர் பாடஅறிவு தொடர்பாக உயர்தராதரம் கொண்டிருத்தல், விளைதிறனுடைய கற்பித்தல், வகுப்பறை முகாமைத்துவம், பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் சுயமேம்பாட்டிற்கு வழிகோலுதல், பாடசாலை அபிவிருத்திப் பணிகளில் ஊக்கமுடன் பங்குபற்றுதல் ஆகிய விடயங்களும் உலகளாவியரீதியில் வலியுறுத்தப்படுகின்றன. ஆணைக்குழு அறிக்கை (2003) 'மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிக் கொண்டுள்ள மனப்பாங்கினை அடிப்படையாகக் நடைபெறுகின்றமை, மாணவர்கள் கொண்டே வகுப்பறைக் கருமங்கள் ஆசிரியர்களில் மிகுந்த கௌரவத்தைக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் வகுப்பறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் பெரும்பாலும் வினைத்திறன் பொருந்தியனவாக அமையும். இவ்வாறான நல்ல மனப்பாங்கினைக் கொண்டுள்ள ஆசிரியர்களது சேவையை நல்ல மாணவர்கள் மற்றும் சமூகம் உட்பட வெளிவாரியாக அவதானிப்பவரின் நம்பிக்கை, வரவேற்பு, விருப்பு, அன்பு அடிப்படையாகக் என்பவற்றையும் ஆசிரியர்கள் சுவீகரித்துக்கொள்வதை கொண்டு வாண்மையுள்ள நல்ல அங்கீகரிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆசிரியர்கள் சமூகத்தில் வாழும் அனைவருக்கும் சில பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைக்கோலங்கள், அணுகுமுறைகள், பழக்கவழக்கங்கள், செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஒழுங்கு முறையில் எல்லாப் பிள்ளைகளுக்கும் கற்பிக்கும் நிறுவனமே பாடசாலையாகும். இப்பாடசாலையின் மைய விசைச்சக்கரம் போன்றவரே ஆசிரியர். ஆசிரியர் புதிய தலைமுறையினருக்கான அறிவையும் அறிவுதேடும் விழிப்புணர்வையும், அறிவுதேடும் மூலகங்களையும் இனங்காண்பதற்கு அடிப்படையாக இருக்கின்றார். ஆசிரியர்களுக்கு விடயங்களில், எண்ணக்கருக்களில் புதிய அறிவும் புதிய கல்வித் தொழினுட்பக் கருவிகளை கையாள்வதில் பயிற்சியும் வழங்கப்படவேண்டியுள்ளது. மாற்றமடையும் மாணவர் அறிவுநோக்கு, சுதந்திரம் என்பவற்றிற்கமைய முகாமைத்துவம் செய்யும் ஆற்றலை விருத்திசெய்யவேண்டியுள்ளது. பல்கிப்பெருகும் அறிவு, புதிய கற்கை நெறிகள், புதிய மாதிரிக் கல்விநிறுவனங்கள் தொடர்பாக சரியான ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்குவதற்குரியவராக ஆசிரியர்கள் வல்லாண்மை பெற உதவவேண்டியுள்ளது. எனவே ஆசிரியர்களின் வாண்மைத்துவப் பண்புகளை மேலுயர்த்துதலே அவசியமாகின்றது. ஆசிரியர் அபிவிருத்தி ஆசிரியர்களின் வினைத்திறனையும் விளைதிறனையும் தொடர்ந்து பாதிக்கும் விடயங்கள் தொடர்பாகத் தெளிவான களஆய்வை மேற்கொண்டு அதன் அடிப்படையில் செயற்றிட்டங்களும் அவற்றை உள்ளடக்கிய நீண்டகால ஆசிரியர் விருத்தித் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு கட்டம் கட்டமாக இடைநிலை மதிப்பீட்டுச்செயல்முறைகளின்படி மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இத்தகைய விளைவுகளை உறுதிப்படுத்தும் தொழிற்பாடுகள் மற்றும் செயல்கள் பற்றி ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், மாகாணக் கல்விஅமைச்சு, தொழிற்சங்கங்கள், அரசுசார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் என்பன ஆழமான கவனம் செலுத்தி முயற்சிகள் ஒன்றிணைக்கப்படுமாயின் ஆசிரியர்களை ஊக்கம் நிறைந்த சமூகப்பொறுப்புமிக்க உயர் வாண்மைத்துறையினராக உயர்த்தமுடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக இலக்குகள், சமூகத் தொழிற்பாடுகள், சமூக அசைவியக்கம், சமூக முன்னேற்றம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளின் மையச்சக்கரமாகத் தொழிற்படும் பாடசாலைகளின் வினைத்திறனையும், விளைதிறனையும் தீர்மானிப்பவர்கள் ஆசிரியர்களே, ஆசிரியர்கள் ஒரு தொழில் செய்பவர்கள் என்ற நோக்கில் மாத்திரமன்றி மாற்றங்களை வழிப்படுத்துபவர்கள், விசைப் படுத்துபவர்கள் என்ற முறையிலும் முக்கியமானவர்கள். ஒரு கல்விமுறையின் ஆற்றலானது பெரும்பாலும் அல்லது கணிசமான அளவிற்கேனும் ஆசிரியரின் தனி இயல்பிலேயே தங்கியுள்ளது. நோக்கங்கள் எவ்வளவுதான் சிறப்புடையனவாகவும், விஞ்ஞான ரீதியாகவும் இருந்தாலும், ஆய்வுக் கருவிகள் பெருமளவில் நவீனமயமானவையாக இருந்தாலும், நிர்வாகம் எவ்வளவுதான் சீரானதாக அமைந்தாலும், பிள்ளைகளுக்குக் கிடைக்கக்கூடிய கல்வியின் விழுமியம் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது. ஆகையால் தகுதியானவர்களைத் தேவையான அளவிற்கு தெரிந்தெடுத்து அவர்களுக்குச் சிறந்த ஆசிரியர் பயிற்சியை அளித்து தொழிலின் முக்கியத்துவத்திற்கும் பொறுப்பிக்குமேற்ற ஒரு தகுதிநிலையையும் மதிப்பையும் கொடுத்தலைத் தவிர தலையாயது வேறொன்றுமில்லை. கற்போரின் இயல்பறிந்தும் கற்றலின் வகை அறிந்தும் பொருத்தமான நுட்பவியலைப் பொருத்தமான நேரத்தில் முன்னெடுத்தல் கல்வித்தொழினுட்பவியல் ஆகும். கல்வி நுட்பவியலில் ஆற்றல் படைத்தோரே ஆசிரியவாண்மையில் மேலுயர்ச்சி பெற முடியும். மாணவரிடத்தும் ஆசிரியரிடத்தும் சுய கணிப்பீட்டை வளர்த்தல் வாயிலாக மேலும் முன்னேற்றங்களை வருவிக்கமுடியும். கற்றல் கற்பித்தலின் நிறைவிலே பயனுள்ள கற்பித்தலை மேற்கொண்டோம் என்று ஆசிரியரது உள்ளத்திலே தோற்றம்பெறும் உளநிறைவு சிறந்த கற்பித்தலின் "அகநிலை" கணிப்பீடாகக் கொள்ளப்படும். கற்பித்தலை ஒரு தொடர்பாடற்செயன்முறை என்றும் குறிப்பிடுவர். அறிபொருளை வழங்குதல்,கையளித்தல், பரப்புதல் முதலியவை கற்பித்தலிலும் இடம்பெறுகின்றன. தொடர்பாடலிலும் இடம்பெறுகின்றன. (Accountabality) சார்ந்த பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆசிரியருக்குரிய பொறுப்புக்கூறும் செயற்பாடு படிப்படியாக அதிகரித்து வருகின்றது.ஆசிரியர் தமக்குரிய தற்படிமத்தை (Self image) மேலோங்கச் செய்வதற்குப் பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு விதந்துரை கொள்கின்றனர். 1. அறிவாற்றல்களைத் தொடர்ந்து பெருக்கிக்கொள்ளல். 2. புலமைவலுவை உருவாக்கிக் கொள்ளல். 3. ஆளுமையையும் தலைமைத்துவப் பண்புகளையும் உயர்த்திக் கொள்ளல். 4. விடுப்புக்கதைகளைத் தவிர்த்துப் பாடசாலை நேரத்தை உச்சப் பயன்பாட்டுக்கு உள்ளாக்குதல், 5. கற்பித்தலை விடாமுயற்சியுள்ள செயற்பாடாக மேற்கொள்ளல். 6. கற்பிக்கும் ஆற்றலும் உற்சாகமும் வீழ்ச்சியடையாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளல். எனவே இவ்வாறான இயல்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆசிரியர்கள் வாண்மைத்துவத்தை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுதல் வேண்டும். இதற்குத் தொடர்ச்சியான வழிகாட்டல்களும் மேற்பார்வையும் இன்றியமையாத செயற்பாடுகளாகக் காணப்படுகின்றன. உங்கள் தேடலுக்கு எனது நன்றி கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

உள்ளக மேற்பார்வை : கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

உள்ளக மேற்பார்வை பாடசாலைமட்ட உள்ளக மேற்பார்வையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள். ஒரு வைத்தியர் நோயாளிகளோடு இடைவினை கொள்ளும்போது அவர் மேற்பார்வைக்கு உட்படுத்துவது இல்லை. ஆனால் ஓர் ஆசிரியர் மாணவர்களுடன் இடைவினை கொள்ளும்பொழுது மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றார். எவ்வளவுதான் தயாரிப்புடன் வகுப்பறையினுள் சென்றாலும் அவர் தகர்ப்புக்கு உள்ளாக்கப்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. கல்வி மேற்பார்வை ஆசிரியர் வாண்மை சார்ந்தது, வாண்மைக்கல்வியும் பயிற்சியும் இன்றி அதனை மேற்கொள்ள முடியாது. பெரும்பாலான வளர்முக நாடுகளில் கல்வி முகாமைத்துவ அதிகார மேல்மட்டங்களில் ஆசிரிய வாண்மைப்பயிற்சியற்றோர் இருத்தலும் பொதுவான பின்னடைவுக்குக் காரணமாகின்றது. கல்வி சார்ந்த மேற்பார்வையில் ஈடுபடுவோர் சமகாலத்து அறிவின் எழுநிலைகள்பற்றி அறிந்தவர்களாயிருத்தல் முக்கியமானது. அவர் தமது அறிவை இற்றைப்படுத்தியவண்ணம் இருத்தல் வேண்டும். காலாவதியான நிலையில்நின்று கல்விச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யமுடியாது. கல்வி மேற்பார்வையாளரிடம் இருக்கவேண்டிய சிறப்பார்ந்த உறுபண்புகளுள் ஒன்றாக "பொறுமை" உணரப்படுகின்றது. தவறுகளைச் சந்திக்கும்போதும் இலக்குகளைத் தெரிவுசெய்யும்போதும் நிலைகுலைந்துவிடாது பொறுமை தாங்கி புறவயமாக அணுகும் நிலையை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். எங்கே விடுபாடு (Lapse) நிகழ்ந்துள்ளது என்பதையும் அதன் விளைவுகள் யாவை என்பதையும் எவ்வாறு தவிர்த்துக்கொள்ளலாம் என்பதையும் விளக்கிக் கூறவேண்டும் தொழிற்பாடுகளிலே குறுக்கீடுகளை ஏற்படுத்துவதைப் ஆற்றுகைசெய்வோரின் உளநிலையை மேம்படுத்தவல்லது. கல்விச் செயல்முறையில் பின்வரும் மேற்பார்வைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 1.உள்ளக மேற்பார்வை 2.புறநிலை மேற்பார்வை 3.உறு நட்பு (Peer group) மேற்பார்வை மேற்பார்வையானது தரநிலை மேம்பாடு கொண்டதாகவும் அணுகுமுறையானது உளவியல் மயப்பட்டதாயும் இல்லாதவிடத்து எதிர்பார்த்த மேற்பார்வையின் வழியாக பெற்றுக்கொள்ள முடியாது. பயன்களை மேற்பார்வையானது எல்லா மட்டங்களிலும் மேற்கொள்ளப்படல் வேண்டும். அனைத்து துறைகளையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும். மேற்பார்வையில் பின்வரும் அடிப்படைகள் வலியுறுத்தப்படுகின்றன. 1. அறிவும் புலமையும் உளப்பாங்கும். 2. கல்விச் செயல்முறை பற்றியும் கல்விநிறுவனங்கள் பற்றியும் கொண்டுள்ள பிரக்ஞையும் அறிவும். 3. அறிவின் சமகால வளர்ச்சிபற்றித் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வு. 4. வாண்மை அறிவும் தொழிநுட்ப அறிவும் அவற்றின் பிரயோகமும். 5. தொடர்பாடல் திறனும் மொழிவழிக் கையளிப்பும். 6. செவிமடுக்கும் திறனும் உசாவல் விருப்பும். 7. நினைவு படுத்தும் திறனும் தொடர்புபடுத்தும் ஆற்றலும். 8. ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் ஆற்றலும் கூட்டுறவு நடத்தையும் 9. பொறுமையும் தளம்பலுறா மனவெழுச்சிகளும், 10. புறவயமான, ஆராய்ந்து தீர்ப்புக் கூறும் ஆற்றலும் நடைமுறைப்படுத்தலும். 11. பணியாளரின் தொழிற்படும் உளநிலையை மேம்படுத்தலும் வலுவூட்டுதலும் 12. ஒழுக்க நெறிகளை நடைமுறைப்படுத்தவல்ல ஊக்கல். மேற்பார்வையாளரிடத்து அறிவும் புலமையும் மேலோங்கி இருத்தல் கல்வியியல் மேற்பார்வையின் சிறப்புமிக்க பரிமாணமாகின்றது. அறிவு நாட்டம் உடையவர்களது கருத்துக்களைக் கீழுள்ள பணியாளர்கள் விருப்புடன் கேட்கமுயலும் நடப்பியல்நிலை காணப்படுகின்றது. உளவியற்பாங்கும் இசைவாக்கல் அணுகுமுறைகளும் மேற்பார்வைக்கு உட்படுவோரிடத்து எதிர்முரண்பாடுகளை வளர்க்காது உற்சாகத்தை வளர்க்க உதவும். பாடாலைகளின்பால் கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனுள்ளதாக இருக்கவேண்டுமாயின் அதிபர்கள் தமது வினைத்திறன் சார்ந்த முகாமைத்துவச் செயல்முறைகள் ஊடாக செயல்களின் வினைத்திறனையும் மாணவர்களின் அடைவுகளையும் அதிகரிக்கவேண்டும். உள்ளக மேற்பார்வையானது ஆசிரியர்களின் குறைகளைக் கண்டறிவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. மேற்பார்வையின் பின்னர் ஒருவரை ஒருவர் விரோதியாகவே காணும் நிலை எழுந்துள்ளது. இது தவிர்க்கப்படல் வேண்டும். உங்கள் தேடலுக்கு எனது நன்றி கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),