Friday, February 10, 2023
விஞ்ஞானமும் சமூகமும் - ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
விஞ்ஞானமும் சமூகமும்
குறிப்புக்கள் :
1.முன்னுரை
2. சமூக அமைப்பு
3. விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள்
4. அவற்றின் விளைவுகள்
5. விஞ்ஞானத்தின் மூலம் சமூகம் பெறும் பயன்கள்
6.பாதிப்புக்கள்
7. முடிவுரை
இன்றைய யுகம் விஞ்ஞான யுகம் எனப்படுகிறது. மனிதவாழ்க்கையோடு விஞ்ஞானம் பிரிக்க முடியாத வகையில் தொடர்பு கொண்டுள்ளது. சமூக முன்னேற்றத்திற்கே விஞ்ஞானம் இன்று அடித்தளமாக அமைந்துள்ளது. எனவே விஞ்ஞானத்திற்கும் சமூகத்திற்குமிடையேயுள்ள தொடர்பினை ஆராய்தல் பயனுடையதாகும்.
சமூகம் என்பது பல்வேறு சேர்க்கைகளின் பிரதிபலிப்பாகும். பெரும் பாலான சமூக அமைப்புக்கள் இன, மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றன. இத்தகைய கூட்டத்தினர் ஓர் இடத்தில் கூடி வாழும் போது அவர்களை ஒரு சமூகத்தினர் என்றழைப்பர். இத்தகைய சமூகம் இன்று முன்னேற்றப் பாதையில் விரைந்து செல்வதற்கு விஞ்ஞானம் துணை செய்கிறது.
விஞ்ஞானம் இன்று மனித வாழ்க்கையுடன் பிரிக்கமுடியாத வகையில் தொடர்பு கொண்டுள்ளது. நாளுக்கு நாள் இத்தொடர்பு வலுப்பெற்று வருகிறது.
ஆரம்ப காலத்தில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனிதர்கள் நாகரிகமுற்று நல்ல பண்பாடுகளைக் கற்றுக் கொள்வதற்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களே அவர்களுக்குத் துணை செய்தன எனலாம். நோய்களால் பாதிப்புற்றோர்க்கும் வாழ்க்கை வசதிகளின்றித் தவித்தோருக்கும் விஞ்ஞானம் வழிகாட்டியாக அமைந்தது. ஜென்னர் என்பவர் கண்டுபிடித்த அம்மைப்பால் ஏற்றும் பணியானது மனித குலத்தைக் கொடிய அம்மை நோயினின்றும் காப்பாற்ற உதவியது. தோமஸ்ஆல்வா எடிசன் கண்டறிந்த மின்சாரக்குமிழ் மக்கள் சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான உலகுக்குள் இட்டுச் சென்றது. லூயி பாஸ்டருடைய நுண்கிருமி தொடர்பான ஆய்வு, மேரி கியூரி அம்மையாரின் நேடியம் தொடர்பான ஆய்வு எல்லாம் மக்கள் சமூகத்திற்குக் கிடைத்த அரிய பயன் தரும் விடயங்களாகும். மருத்துவத்துறையை மட்டும் எடுத்துக் கொண்டால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் தொற்றுநோய்கள் பல தடுக்கப்படுகின்றன. குழந்தைகட்கு முக்கூட்டு மருந்தேற்றுதல், போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்தளித்தல் என்பனவற்றை இதற்கு எடுத்துக்காட்டுக்களாகக் கூறலாம்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களில் ஒன்றான மின்சாரம் இன்று சகல தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தப்படுகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்ட தொழில் நுட்பம் இன்று சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுகிறது. தொடர்பாடல் துறையிலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மக்களுக்கு இன்று பெரிதும் பயன்படுகின்றன. தொடர்புச் சாதனங்களின் அதிகரிப்பும் விஞ்ஞானத்தின் விளைவே எனலாம். தொலைபேசி, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, கணனி, இணையம், தொலைநகல், வீடியோ சாதனங்கள் முதலியன கல்வி வளர்ச்சிக்கும் சமூகப் பயன்பாட்டிற்கும் உதவுகின்றன. போக்குவரத்துத் துறையை எடுத்துக் கொண்டால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் உச்சக்கட்ட பயன்பாட்டை இன்று மக்கள் சமூகம் பயன்படுத்தி வருவதைக் காணலாம். நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் பேறாக நீராவிக்கப்பல், நீராவிப்புகையிரதம் என்பவற்றின்மூலம் பயணம் செய்த மக்கள் இன்று அதன் துரித வளர்ச்சியினால் அதிவேகமாகச் செல்லும் 'சுப்பர்சொனிக்', 'ஜெட்" விமானங்களில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இவை எல்லாம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் பயனேயாகும்.
மருத்துவத்துறையில் இன்று மகத்தான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. என்றால் அதற்கும் விஞ்ஞான வளர்ச்சியே மூலகாரணம் எனலாம். இருதயமாற்றுச் சிகிச்சை, இரவல் சிறுநீர்ப்பை பொருத்துதல், ஸ்கேனர் மூலம் நோய்களைக் கண்டறிதல், பரிசோதனைக் குழாய் மூலம் கருவை உண்டாக்குதல் போன்ற அதிநவீன முறைகளுக்கெல்லாம் விஞ்ஞானமே வித்திட்டுள்ளது. சமூகத்திற்குப் பயன் தரும் பல்வேறு மருத்துவப்பணிகளுக்கு விஞ்ஞானம் மூலகாரணமாக விளங்கி வருகிறது.
இவை மட்டுமன்றிப் புதியதோர் உலகினைக் காணவும், விண்வெளியில் உலா வரவும் விஞ்ஞானம் இன்று வழி கோலியுள்ளது. சந்திரமண்டலத் தியல்பு கண்டறியவும் செயற்கைக் கோள்களை விண்ணில் பவனி வரச் செய்யவும் விஞ்ஞானம் இன்று வழி காட்டுகிறது. விண்வெளி ஆய்வுகள் நாளுக்குநாள் பெருகி வருகின்றன. விண்வெளிக்கு மனிதன் சென்றுவரவும், வேறு கோள்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் விஞ்ஞானம் உதவுகின்றது.
சமூகத்தின் பயன்பாட்டுக்கு விஞ்ஞானம் இன்று பெரிதும் உதவுகின்றது. இணையம் மூலம் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது. முன்பின் தெரியாதவர்களோடு கூட இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பு விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் இன்று மக்கள் சமூகத்திற்குக் கிட்டியுள்ளது.
விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றம் மக்கள் சமூகத்திற்கும் பல்வேறு துறைகளில் பயன் தருகின்ற போதிலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் சில உள்ளன. அணுசக்தியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி அதனை ஆக்கப்பணிகளுக்கே பயன்படுத்த விரும்பினார். ஆனால் அது இன்று அழிவு வேலைகளுக்கே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கர் யப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டுகளைப் போட்டு பல்லாயிரம் மக்களைப் பலி கொண்டதை நாம் மறக்கமுடியாது. இன்றும் அணுசக்தி ஆயுதங்களைத் தயாரிப்பதில் வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன. இவை எல்லாம் விஞ்ஞானத்தால் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களாகும். இத்தகைய அழிவு வேலைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தாது ஆக்கவேலைகளுக்கு அதனைப் பயன்படுத்துமாறு மக்கள் சமூகம் இன்று குரல் கொடுத்து வருகின்றது.
சுருங்கக் கூறின் விஞ்ஞானம் இன்று மக்கள் சமூகத்தின்மீது பிரிக்கமுடியாத வகையில் செல்வாக்குச் செலுத்துகிறது. அதன்மூலம் மக்கள் சமூகம் பெறும் நன்மைகள் பலவாயினும் தீமைகள் சிலவும் உண்டென்பது தெளிவாகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் மக்கள் சமூகத்திற்கு வியத்தகு பயன்களை வழங்குமென எதிர்பார்க்கலாம்.
ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
உலகமயமாக்கல் - ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
உலகமயமாக்கல்
குறிப்புக்கள் :
1. முன்னுரை
2. உலகமயமாக்கல் என்றால் என்ன?
3. உலகமயமாக்கலும் நவீன தொழினுட்பமும்
4. உலகமயமாக்கலை ஊக்குவிக்கும் சக்திகள்
5. உலகமயமாக்கலால் ஏற்படும் விளைவுகள்
6. முடிவுரை.
உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளையும் அவற்றில் வாழும் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயன்முறையாகும். அது பொருளாதார, தொழில்நுட்ப, கலாசார மற்றும் அரசியல் பிணைப்புக்களுக்கூடாக உலக மக்களை மிக அருகில் எடுத்து வருவதுடன், அவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. மிக முக்கியமானதாக இருந்து வரும் பொருளாதார கண்ணோட்டத்தில் நோக்கும் பொழுது, உலகமயமாக்கல் என்பது அனைத்து நாடுகளினதும் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப் பாகவும், தேசிய சந்தைகள் ஓர் உலகளாவிய சந்தையில் ஒருங்கிணையும் ஒரு செயன்முறையாகவும் உள்ளது. தேசிய சந்தைகள், பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றிலான அதிகரித்த அளவிலான எல்லை தாண்டிய வர்த்தகத்திலும் சர்வதேச மூலதனம் மற்றும் பணம் என்பவற்றின் அசைவுகளுக்கூடாகவும் தொழில்நுட்ப பரிமாற்றத்துக் கூடாகவும் இது இடம் பெற்று வருகின்றது. புதிய சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், செலவு அனுகூலம் மற்றும் உயர் இலாபம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு பொருளாதார நடவடிக்கைகள் தேசிய எல்லைகளைத் தாண்டி வியாபித்துச் செல்லும் பொழுது பண்ட உற்பத்தி வர்த்தகம் மற்றும் முதலீடு என்பன சர்வதேசமயமாக்கப்படுகின்றன. அரசியல் அடிப்படையில் நோக்கும் பொழுது உலகமயமாக்கல் என்பது ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள், பால் சமத்துவம், ஒளிவு மறைவற்ற ஆட்சி மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் என்பவற்றின் பெருக்கம் என்ற வகையிலேயே கருதப்பட்டு வருகின்றது. இது தவிர உலகமயமாக்கல் செயன்முறை ஒரு சமூகவியல் ரீதியான பரிமாணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது, உலக மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வதும் பொப் இசை, ஹொலிவூட் படங்கள், நீலநிறக் காற்சட்டைகள், திடீர் உணவகங்கள் மற்றும் நவீன வாழ்க்கை மோஸ்தர்கள் என்பவற்றின் பரவலாகவும் அது நோக்கப்படுகிறது. பொதுவாகக் கூறுவதானால் உலகமயமாக்கல் சக்திகள் கைத்தொழில் நாடுகளிலிருந்தே தோன்றி வருகின்றன. வளர்முக நாடுகளை தம்மால் வடிவமைக்கப்படும் உலகளாவிய அமைப்புக்குள் உள்வாங்கிக் கொள்வதே இச்சக்திகளின் நோக்கமாகும். இது அநேகமாக மேலைய நாடுகளின் மூலதனம், தொழில்நுட்பம், கலாசாரம், எண்ணப் போக்குகள் மற்றும் வாழ்க்கைப் பாணிகள் என்பவற்றை வளர்முக நாடுகளுக்குள் ஊடுருவச் செய்கின்றன. இந்த வகையில் இது உலக நாடுகளின் பொருளாதார, கலாசார, அரசியல் மற்றும் சித்தாந்த கொள்கைகளை ஒரு முகப்படுத்தும் (அல்லது மேலைத் தேசமயமாக்கும்) ஒரு செயன் முறையாகவே தென்படுகிறது.நவீன தொழில்நுட்பம்
மறுபுறத்தில், உலகமயமாக்கல் என்பது தொழில்நுட்பத்திற்கு ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக காலம், இடம் மற்றும் தேசிய எல்லைகள் என்பவற்றைச் சுருக்கியும் இல்லாமல் செய்தும் வருகின்றது. இணையம். இடம்பெயர் தொலைபேசி, தொலைநகல் பொறி முதலிய புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மலிவானவையாகவும் உயர் வேகத்திறன் கொண்டவையாகவும் பரந்த ஆட்புலத்தை உள்ளடக்கக் கூடியவையாகவும் உருவாகி வருகின்றன. அவை நிதிச்சந்தைகளின் ஒருங்கிணைப்பினையும் பல தேசிய நிறுவனங்களின் பரவலையும் மக்களிடையே தகவல் மற்றும் கருத்துக்கள் என்பவற்றின் பரிமாற்றத்தினையும் வியப்பூட்டும் அளவுக்கு துரிதப்படுத்தியுள்ளன.
நாங்கள் இன்று வாழ்ந்துவரும் உலகம் பயங்கரமான போர்கள், வன்செயல்கள் மற்றும் குற்றச்செயல்கள் என்பவற்றினாலும் பெருகிவரும் அரசியல் கொந்தளிப்புக்களினாலும் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுக் கட்டுரை மலர் 13 த-துரைசிங்கம்
பரவலாக வியாபித்துச் செல்லல், இந்தச் சூழ்நிலையில் பேரளவிலான அரசியல் மற்றும் பொருளாதார சக்தியை தம்வசம் கொண்டிருக்கும் (ஐரோப்பா, ஜப்பான், சீனா, ருஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய) வல்லரசுகள் உருவாகியுள்ளன. 1990 களின் போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட (தொழில் நுட்ப மாற்றங்கள். தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை அடுத்து சர்வதேச ரீதியில் அரசியல் சூழலில் ஏற்பட்ட திருப்பங்கள் போன்ற) பெருமாற்றங்கள் உலகப் பொருளாதாரம் படிப்படியாக ஒருங்கிணைவுதற்கான ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்தன. 1990 களின் நடுப்பகுதியின் போது வளர்முக நாடுகள் அனைத்துமே உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டதுடன், வர்த்தக தாராளமயமாக்கலுக்கான கடப்பாடுகளை ஏற்றுக் கொண்டன.
எவ்வாறிருப்பினும், உலகமயமாக்கலின் அனுகூலங்கள் நாடுகளுக்கு இடையில் சமமான முறையில் பகிரப்பட்டிருக்கவில்லை என்பதனை ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் மானிட அபிவிருத்தி அறிக்கை போன்ற பல ஆவணங்கள் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன. உலகமய மாக்கலின் விரிவாக்கத்துடன் இணைந்த விதத்தில் சமூக, அரசியல் கொந்தளிப்புக்கள் தோன்ற முடியும் என்பதனை அண்மையில் சீட்டில் நகரத்திலும் பல மூன்றாவது உலக நாடுகளிலும் இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. உலகவங்கி / சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் உலகமயமாக்கலை ஆதரித்து பேசிவந்த போதிலும், வறிய உலகம் எதிர்கொண்டிருக்கும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், போஷாக்கின்மை மற்றும் தொழில்நுட்ப பின்னடைவு போன்ற முக்கியமான பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகின்றது. கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பயிற்சி, நிதி, வங்கித் தொழில், காப்புறுதி மற்றும் போக்குவரத்து போன்ற வளங்கள் அனைத்தும் வளர்ச்சியடைந்துள்ள கைத்தொழில் நாடுகளிலேயே ஒன்று திரண்டுள்ளன. இந்த நிலையில் வளர்முக உலகம் எதிர்காலத்தில் மாற்றம் மற்றும் செல்வச் செழிப்பு என்பனவற்றைச் சாதித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அரிதாகவே தென்படுகின்றன. உலகமயமாக்கலை முனைப்புடன் ஆதரித்துப் பேசி வருபவர்கள், வறிய நாடுகள் தொடர்பாக அவர்கள் முன்வைத்து வரும் அபிலாஷையுடன் கூடிய இலக்குகள் சாதித்துக் கொள்ளப்படுவதனை உறுதி செய்தாலே ஒழிய இன்றைய இருண்ட யதார்த்த நிலைமைகள் இன்னும் பல வருடங்களுக்கு அவ்வாறே தொடர்ந்து நீடித்து வரக்கூடும். நன்றி - 'பொருளியல் நோக்கு"
- ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
வீரமா முனிவரின் தமிழ்ப் பணிகள் - ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
வீரமா முனிவரின் தமிழ்ப் பணிகள்
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
பெரும் புலவர் வேண்டும்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்" என்றார் பாரதியார். இக் கவிதைக்கு இலக்கணமாக, சமயம் வளர்க்க வந்த மேலை நாட்டினர் சிலர் விளங்கினர். தமிழின் சுவை கண்டனர்; பழமை தெரிந்தனர்; இனிமை நுகர்ந்தனர்; தீஞ் சுவைக்காப்பியம் படைத்தனர். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியே இனிமையெனத் துணிந்தனர். தமிழ் வளர்ச்சிக்காகத் தம்மையே அர்ப்பணித்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் இத்தாலிய நாட்டினரான வீரமாமுனிவர். அமிழ்தினும் இனிய தமிழ் மொழிகற்று, அதன் இனிமை தெளிந்து காப்பியமும், கலம்பகமும், இலக்கண நூல்களும் அகராதியும் தந்து தமிழ் கூறும் நல்லுலகின் பெரும் மதிப்பினைப் பெற்றவர். காலத்தால் மறக்க வொண்ணாப் பெரும் புலவர் அவர்.
தமது ஒப்பற்ற பணிகளால் தமிழர் தம் உள்ளங்களில் எல்லாம் உறைந்துள்ள வீரமாமுனிவரின் இயற்பெயர் கொன்ஸ்டான் சியஸ் ஜோசப் பெஸ்கி என்பதாகும். இவர் இத்தாலிய நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் காஸ்திகிளியோன் என்னும் ஊரில் கொண்டல்போ பெஸ்கி என்பாருக்கும் எழில் மிகுந்த எலிசபெத் அம்மையாருக்கும் 1680ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் எட்டாம் நாள் (08.11.1680) அருமை மகனாகத் தோன்றினார்.
இளமை முதலே இலக்கியக் கல்வியில் ஆர்வமிக்கவராக. விளங்கினார். தமது 18ஆம் வயதில் இலக்கியக் கல்வியை முடித்துப் பின்னர் ஓராண்டு தத்துவம் பயின்றார். பின்னர் உரோமாபுரியில் இத்தாலி, இலத்தீன், பிரெஞ்சு, கிரீக் முதலிய மொழிகளைக் கற்றார். 1706ஆம் ஆண்டு திருமுறைக் கல்வியைக் கற்கத் தொடங்கி நாலாண்டுகள் பயின்று குருவாகப் பட்டம் பெற்றார். துறவற நெறியைப் போற்றிமேற் கொண்ட இப்பெருந்தகை சமயப் பணியாற்றும் நோக்குடன் 1710ஆம் ஆண்டு தமது முப்பதாவது வயதில் லிஸ்பனிலிருந்து புறப்பட்டுத் தமிழ் நாட்டில் உள்ள அம்பலக் காட்டை வந்தடைந்தார். பின்னர் 8.5.1711முதல் மதுரையைத் தமது உறைவிடமாகக் கொண்டார். மதுரையில் தமிழ், தெலுங்கு, வடமொழிகளைக் கற்றுப் பன்மொழி வல்லுநரானார்.
இவருக்குத் தமிழ் கற்பித்தோரில் சுப்பிரதீபக் கவிராயர் என்பவர் குறிப்பிடத்தக்கவராவார். வீரமாமுனிவர் புலாலுணவை விலக்கி, ஒருவேளை மட்டும் உணவுண்டு, யோகியர் போலத் தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்.
தமிழின் மீது கொண்ட பெரும் பற்றினாலும் தமிழ்ப் புலமையாலும் உந்தப் பெற்ற வீரமாமுனிவர் மேனாட்டினின்றும் வரும் மிஷனரிகளுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகவும் விளங்கினார். திருக்குறள், சிந்தாமணி, கம்பராமாயணம் முதலான நூல்களை நுணுகிக் கற்று, கவிபாடும் திறமை பெற்றார். சிந்தாமணியைப் போலச் சிந்தைக்கினிய காப்பியம் ஒன்றைக் கிறித்தவ நெறியில் படைத்திடப் பேரார்வம் கொண்டார். அதன் பேறாக உருவானதே "தேம்பாவணி'' எனினும் அருங்காவியம். 3615 விருத்தப்பாக்களைக் கொண்ட இக்காவியம் சொல்லழகும், பொருளாழமும், கற்பனை நயமும் சந்த இன்பமும், சொல்வளமும் கொண்டதாக, கற்றோர் போற்றும் பெருங்காவியமாகத் திகழ்கிறது.
தேம்பாவணி என்னும் காப்பியம் இயேசு நாதரின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு என்னும் சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு படைக்கப் பெற்றது. கத்தோலிக்கத் திருச்சபைக் கொள்கைச் சார்பு கொண்டது. இந்நூல் திருமறையிலிருந்து 105 வரலாற்றுப் பகுதிகளைக் கதைவடிவாகவும் தத்துவ வகையாகவும் விளக்கும் சிறப்புடையது.
திருவள்ளுவர், திருத்தக்கதேவர், கம்பர், சேக்கிழார். மாணிக்கவாசகர் முதலான தமிழ் நாட்டுப் புலவர்களது கருத்துக்களும் மேலை நாட்டுக் கவிஞர்களான ஹோமர், வேர்ஜில், தாந்தே போன்றோரது கருத்துக்களும் இலைமறை காய்போல இக்காப்பியத்தில் விளங்குகின்றமையைக் காணலாம்.
வீரமாமுனிவரின் கவியாற்றலை நன்கு புலப்படுத்தும் பாடல்களுக்குச் சான்றாக கோலியாத்திற்கும் தாவீதுக்கு மிடையேயான உரையாடலைக் குறிப்பிடலாம். அரக்கத்தன்மையை ஒழிக்க இறையருள் துணைபுரிந்த நிலையை உணர்த்தும் பாடலொன்றில்
“கல்லை யேற்றலும் கவணினைச் சுழற்றலு மக்கள் ஒல்லை யோட்டலும் ஒருவரும் காண்கில ரிடிக்கும் செல்லை யொத்தன சிலைநுதற் பாய்தலும் அன்னாள் எல்லை பாய்ந்திருள் இரிந்தென வீழ்தலும் கண்டார்”
என்று கோலியாத்தின் வீழ்ச்சியை அழகொளிர விளக்குகின்றார். சிறந்த உவமைகள் மூலம் தமது புலமையைப் புலப்படுத்தியவர் வீரமா முனிவர். பைதிரம் நீங்குபடலத்தில் பல பாடல்களில் அவரது உவமைச் சிறப்பினை நாம் காணலாம்.
வானதூதன் இட்ட கட்டளையைக் கேட்ட சூசை உற்ற துயரினை.
அழற்குளித்த பைந்தாதோ கணிபாய் வேலோ அகல்வாயுட் புழற்குளித்த செந்தியோ உருமோ கூற்றோ பொருவின்றி நிழற் குளித்த உருவானோன் கொடுஞ் சொற்கேட்டு நெடுங்கடல் சுழற் குளித்த மனஞ்சோர்ந்துவளனப் பணியைத் தொழுதுனைந்தான்.
என்ற பாடல் மூலம் புலப்படுத்தினார். வானதூதன் உரைத்த மொழிகேட்டு நெருப்பில் மூழ்கிய பூந்தாது போலவும் கண்ணில் பாய்ந்த வேல் போலவும் புண்ணினுள் நுழைந்த செந்தி போலவும், நெடுங் கடல் நீரில் உண்டான கழியில் அகப்பட்டு முழ்கிய தன்மை போலவும். குசை வருத்தினான் என்றார்.
மாணிக்கவாசகர் அம்மானை பாடியது போல வீரமாமுனிவரும் தூய கித்தேரியம்மையின் வரலாற்றை 'அம்மானை' என்னும் சிறு நூலாகப் படைத்துள்ளார். "பேதையர்க்கும் ஓர் அம்மானை பேதை நான் பாடிடுவேன்" என்று சொல்வது வீரமாமுனிவரின் அடக்கத்தன்மைக்கு ஏற்ற சான்றாகும். கொள்ளிட நதியின் வட கரையில் உள்ள ஏலக்குறிச்சி என்ற ஊரில் கோவில் ஒன்று கட்டி அதில் மரியன்னையின் திருவுருவத்தை வைத்தார். அந்த அம்மையை அடைக்கலமாதா என அழைத்து அவ்வன்னையின் மீது "திருக்காவலூர்க்கலம்பகம்" என்னும் நூலையும் பாடினார்.
தமிழில் அகராதிகள் தோன்றுதற்கு வழிகாட்டிய பெருமையும் இவரையே சாரும். "அகர முதல எழுத்தெல்லாம்...." என்ற வள்ளுவர் உரைத்த மொழிக்கமையத் தமிழில் விளங்கும் சொற்கள் அனைத்தையும் அகரவரிசைப்படி வரிசைப்படுத்தி அவற்றைப் பொருள் விளங்கத் தொகுத்து அகராதியாக வெளியிட விரும்பினார். பண்டைய தமிழ் நிகண்டுகளில் உள்ள சொற்களை வரிசைப்படுத்தி பெயர், பொருள், தொகை, தொடை என்ற நான்கு வகைகளில் பிரித்து அமைத்து ""சதுரகராதி" என்னும் பெயரால் 1732இல் வெளியிட்டார்.
பிற்காலத்தெழுந்த பேரகராதிகட்கெல்லாம் இதுவே அடிப்படையாக அமைந்தது. இதனாலே தான் இவர் 'தமிழகராதியின் தந்தை' எனப் போற்றப்படுகிறார். இவரைப் பின்பற்றிப் பல மேனாட்டுத் தொண்டர்கள் தமிழ் அகராதிகளை வெளியிட்டனர்.
அகராதி வெளியீட்டோடுமட்டும் நின்று விடாது பல மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டார். உலகப் பொது மறையான திருக்குறளை ஆழ்ந்து கற்றார். தாம் கற்று மகிழ்ந்த திருக்குறளின் அருமையினைத் தன் நாட்டவரும் கற்று இன்புற வேண்டுமெனக் கருதினார். திருக்குறளின் அறத்துப் பாலினையும் பொருட்பாலினையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்து 1730இல் வெளியிட்டார்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தினை மேற்கொண்ட வீரமாமுனிவர் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கும் பெருந் தொண்டாற்றினார். இவர் எழுதிய வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருகதை என்பன அவரது உரை நடைச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாக உள்ளன.
வீரமாமுனிவர் இலக்கிய நூல்களை மட்டுமன்றி இலக்கண நூல்களையும் எழுதியுள்ளார். தொன்னூல் விளக்கம் என்னும் பெயரால் இவர் இயற்றிய இலக்கண நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அருந்தமிழ் இலக்கணம் ஐந்தையும் விரித்து விளக்கினன் வீரமா முனியே" என்று தொன்னூலின் சிறப்புப்பாயிரம் செப்புகின்றது. பேச்சுத் தமிழ் இலக்கணத்தைக் 'கொடுந்தமிழ் இலக்கணம், என்றும் ஏட்டுத் தமிழ், இலக்கணத்தைச் 'செந்தமிழ் இலக்கணம்' என்றும் தனித்தனியே இலக்கணம் எழுதியுள்ளார். இதன் மூலம் வீரமாமுனிவரின் இலக்கணப் புலமை நன்கு புலப்படுகிறது. மேனாட்டவராயினும் தமிழ் மொழியினைத் தமிழ் இலக்கண மரபுக்கமையக் கற்றுத், தாம் கற்றவற்றைப் பிறகும் கற்று இன்புறும் வகையில் வெளியிட்ட பெருந்தகை வீரமாமுனிவர் என்றால் அது மிகையல்ல.
இவர் எழுதிய 'பரமார்த்த குரு கதை' சிறுகதை ஆக்கத்திற்கு வழிகாட்டியதெனலாம். பின்னாளில் தமிழில் சிறுகதைகள் தோன்றுதற்கு வழிகாட்டியாக முன்னோடியாக இவர் திகழ்ந்துள்ளார். இவரது பரமார்த்த குருகதை இன்றும் பலராலும் விரும்பிப் படிக்கப்படுவதை நாம் கண்ணாரக் காணலாம்.
வாழ் நாள் முழுதும் சமயப் பணியுடன் தமிழ்ப் பணியைத் தன் தலையாய பணியாகக் கொண்டு தொண்டாற்றிய வீரமாமுனிவர் 1747ஆம் ஆண்டு மாசித்திங்கள் நான்காம் நாள் (04.02.1747) தமது அறுபத்தாறாம் வயதில் அம்பலக் காட்டில் உள்ள கிறித்தவ மடத்தில் இறையடி எய்தினார். காலத்தால் மறக்கவொண்ணாத் தமிழ்ப்பெரும் புலவராக வீரமாமுனிவர் விளங்குகின்றார். அவர் குறித்துச் சொல்லின் செல்வர், டாக்டர். ரா.பி.சேதுப்பிள்ளை கூறிய பின்வரும் வார்த்தைகள் அவர்தம் அழியாப் புகழுக்குச் சான்றாகும்.
** வீரமாமுனிவர் ஆக்கிய நூல்களால் தமிழ்த் தாய் அழகு பெற்றாள். தேம்பாவணி, தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மலர் மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சி அளிக்கின்றது. தொன்னூல் பொன்னூலாக விளங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது."பைந்தமிழ் வளர்த்த பாவலரான வீரமாமுனிவரின் திருநாமம் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
- ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
Friday, February 3, 2023
கல்வி தொடர்பான இணையத்தளங்களின் தொகுப்பு.
#கல்வி
தொடர்பான இணையத்தளங்களின் தொகுப்பு.
Useful links for Education Sector.
*Ministry of education (MOE)*
(http://www.moe.gov.lk/web/index.php?lang=ta)
*Examination Department*
(https://www.doenets.lk/)
*National Institute of Education (NIE)*
(http://www.nie.lk/default3)
*Northern Province Teachers*
(https://m.facebook.com/profile.php?id=104199224584207&ref=content_filter)
*Educational Publication Department*
(http://www.edupub.gov.lk/)
*E-THAKSALAWA*
(http://www.e-thaksalawa.moe.gov.lk/web/ta/)
*Teachers Guide*
(http://www.nie.lk/seletguide3)
*School Books Download*
(http://www.edupub.gov.lk/BooksDownload.php)
*Past Papers*
(https://www.doenets.lk/pastpapers)
*Model Papers and Marking Scheme*
(https://www.doenets.lk/evaluationreports)
*Exam Results*
(https://www.doenets.lk/examresults)
#npteachers
*Education Ministry Circular*
(http://www.moe.gov.lk/web/index.php?option=com_circular&view=circulars&Itemid=159&lang=ta)
தமிழ் எழுத்துகளின் பிறப்பு - ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
தமிழ் எழுத்துகளின் பிறப்பு :
ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
எழுத்துகளின் பிறப்பு
தமிழ் எழுத்துகளின் வகைகள் பற்றியும் அதன் தொகை பற்றியெல்லாம் அறிந்துகொண்ட நாம், அடுத்து எழுத்துகள் எவ்வாறு எங்குப் பிறக்கின்றன என்பதையும் அறிந்துகொள்ளுதல் வேண்டியது அவசியமானதாகும்.
எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள்.
உயிர் தங்கியுள்ள உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய இடங்களில் தங்கி, உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன.
எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
இடப்பிறப்பு
எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு, கழுத்து, தலை, மூக்கு முதலானவற்றை இடப்பிறப்பு எனவும்
முயற்சிப் பிறப்பு
உதடு, நாக்கு, பல், மேல்வாய்(அண்ணம்) முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சிப் பிறப்பு எனவும் வழங்குவர்.
மெய்யெழுத்துகளை ஒலிக்கும்பொழுது வேறுபட்ட மூன்று ஒலிகளை நாம் கேட்கலாம்.
அவை வல்லின ஒலி, மெல்லின ஒலி, இடையின ஒலி என்பன.
அவ்வொலிகள் வேறுபடுவதற்குக் காரணம், அவை பிறக்கும் இடங்கள் வேறுபடுவனவேயாகும்.
எழுத்துகளின் இடப்பிறப்பு
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்ற உயிரெழுத்துகள் பன்னிரண்டும் ய, ர, ல, வ, ழ, ள என்ற இடையின எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ங,ஞ,ண,ந,ம,ன என்ற மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
க,ச,ட,த,ப,ற என்ற வல்லின எழுத்துக்கள் ஆறும் மார்பினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ஆய்த எழுத்து ஃ தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
உயிர் எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு
அ, ஆ என்ற இவ்விரண்டு உயிர்களும் வாயைத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.
அவற்றுள்
முயற்சியுள் அஆ அங்காப்புடைய – நன்னூல் நூ.76
இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து எழுத்துகளும் வாயைத் திறப்பதோடு மேல்வாய்ப் பல்லை, நா விளிம்பு தொடுவதால் பிறக்கின்றன.
இ, ஈ, எ, ஏ, ஐ அங்காப்போடு
அண்பல் முதல்நா விளிம்புற வருமே. – நன்னூல் நூ.77
உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகிய ஐந்து எழுத்துகளும் உதடுகளைக் குவித்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.
உ, ஊ, ஒ, ஓ, ஔ இதழ் குவிவே. – நன்னூல் நூ.78
உயிரெழுத்துகளின் உச்சரிப்பு முறை
உயிர் எழுத்துகளை உச்சரிப்பு முறையில் அடிப்படையில் இதழ் குவிந்த உயிர்கள் இதழ் குவியா உயிர்கள் என இரண்டாகப் பகுக்கலாம்.
இதழ் குவிந்த உயிர் - உ, ஊ, ஒ, ஓ, ஔ
இதழ் குவியா உயிர் - அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ.
மெய்யெழுத்துகளின் பிறப்பு முயற்சி
க், ங் என்ற இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.
ச், ஞ் என்ற இவ்விரு மெய்களும் இடை நா (நடு நாக்கு) நடு அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.
ட், ண் என்ற இவ்விரு மெய்களும் நாவினது நுனி, அண்ணத்தினது நுனியைத் தொடுவதனால் பிறக்கின்றன.
த், ந் எழுத்துகள் மேல்வாய்ப் பல்லினது அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் பிறக்கின்றன.
ப், ம் என்ற இரண்டும், மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த, பிறக்கின்றன.
ய் என்னும் எழுத்து, நாக்கினது அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் பிறக்கின்றது.
ர், ழ் என்ற இவ்விரு மெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.
ல் என்ற எழுத்து, மேல்வாய்ப் பல்லின் அடியை, நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவதனால் பிறக்கிறது.
ள் என்ற எழுத்து, மேல்வாயை, நாவினது ஓரங்கள் தடித்துத் தடவுவதனால் பிறக்கிறது.
வ் என்ற எழுத்து, மேல்வாய் பல்லைக் கீழுதடு பொருந்துவதனால் பிறக்கின்றது.
ற், ன் என்ற இவ்விரு மெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.
மெய்யெழுத்துகளின் உச்சரிப்பு முறை
மெய் எழுத்துகளை அவற்றின் உச்சரிப்பு அல்லது பிறப்பு அடிப்படையில் பின்வருமாறு ஏழு வகைப்படுத்தலாம்.
ப், ம் ஆகியவற்றை இரண்டு இதழ்களும் பொருந்த உச்சரிக்கிறோம். ஆகவே, இவற்றை ‘ஈரிதழ் ஒலிகள்’ என்பர்.
வ் எழுத்தைக் கீழ் உதட்டில் மேற்பல் பொருந்த உச்சரிக்கிறோம். அதனால், இதனை ‘உதட்டுப்பல் ஒலி’ என்பர்.
த், ந் ஆகியவற்றை நுனி நா, மேற்பல்லின் உட்புறத்தைப் பொருத்த உச்சரிக்கிறோம். அதனால் இவற்றைப் ‘பல் ஒலிகள்’ என்பர்.
ல், ர், ற், ன் ஆகியவற்றை நுனி நா, நுனி அன்னத்தைப் பொருந்த உச்சரிக்கிறோம். அதனால், இவற்றை ‘நுனி அண்ண’ ஒலிகள் என்பர்.
ட், ண், ழ், ள் ஆகியவற்றை நுனி நா மேல்நோக்கி வளைந்து, நடு அண்ணத்தைத் தொட உச்சரிக்கிறோம். அதனால், இவற்றை ‘வளை நா ஒலிகள்’ என்பர்.
ச், ஞ், ய் ஆகியவற்றை நடு நா, நடு அண்ணத்தைத் தொட உச்சரிக்கிறோம். அதனால் இவற்றை ‘அண்ண ஒலிகள்’ என்பர்.
க், ஞ் ஆகியவற்றைக் கடை நா கடை அண்ணத்தைத் தொட உச்சரிக்கிறோம். அதனால் இவற்றைக் ‘கடை அண்ண ஒலிகள்’ என்பர்.
‘ப்’, ‘ம்’ ஆகியவற்றை ‘ஈரிதழ் ஒலிகள்’ என்கிறோம்.
க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு வல்லினங்களும் வெடிப்பொலிகளாகும்.
‘ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு மெல்லினங்களும் மூக்கொலிகளாகும்
‘ல்’, ‘ள்’, ‘ழ்’ ஆகியவற்றை மருங்கொலிகள் என்பர்.
‘ர்’ எழுத்தை உச்சரிக்கும்போது நுனி நா நுனி அண்ணத்தை வருட, ஒலி பிறப்பதால் இதனை வருடொலி என்பர்.
‘ற்’ எழுத்தை உச்சரிக்கும்போது நுனி நா நுனி அண்ணத்தைப் பொருந்தி அதிர்வதால் இதனை ஆடொலி என்பர்.
‘ய்’, ‘வ்’ ஆகியவை உயிரொலிக்குரிய தன்மையும் மெய் ஒலிக்குரிய தன்மையும் கொண்டிருப்பதால் (ஐ =அய், ஔ= அவ்) இவற்றை அரை உயிர் என்பர்.
ஆசிரியர் : எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
Wednesday, February 1, 2023
ஐரோப்பியர காலம் - ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
ஐரோப்பியர காலம்
ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
ஐரோப்பியர் காலம்
நாயக்கர் காலத்தின் பின் உள்ள பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளைக் கொண்ட காலப்பகுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐரோப்பியர காலம் எனப்படும்.
1.அரசியல் நிலை
பதினெட்டாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டில் நாயக்கராட்சி நிலைகுலைய, இஸ்ணமியர் பலமுறை படையெடுத்து வந்து சற்றில் நாட்டினைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர். அவர் இஸ்லாமியர் மதத்தினராதலும் நாட்டிலே சிறந்த அரசியலை அவர் நிறுவ முடியாதிருந்ததனாலும் பற்பல இடங்களிற் சண்டைகளும் குழப்பங்களும் இடையிடையே நிகழ்ந்து கொண்டிருந்தன. அதனால் அவர் தம் ஆட்சியை நிலைப்படுத்த முடியாதித்தது. அந்நாளில் வியாபாரஞ் செய்தற் பொருட்டு இந்தியாவில் வந்து தங்கியிருந்த பிரான்சியருக்கும் ஆங்கிலேயருக்குமிடையே பொராமையும் போட்டியும் இருந்து வந்ததனால் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்க்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர். இஸ்லாமியராட்சி/ குழப்பங்களுக்கும் ஏதுவாயிருந்ததை கண்ட அவர்கள் உள்நாட்டு அரசியர் விடயங்களிலும் தலையிடத் தொடங்கினர். நாளடையில் இஸ்லாமியராட்சி வலிகுன்ற ஆங்கிலேயர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலே தமிழ் நாட்டைக் கைபற்றி ஆளத்தொடங்கினர். பிராஞ்சியரும் புதுச்சேரி, காரைக்கால் என்னுமிடங்களைக் கைப்பற்றினர், இவ்வாறு ஐரோப்பியர் ஆட்சிக்குட்பட்ட தமிழ் நாட்டில் அமைதி நிலவி (வந்ததனால் நாடு பலவழிகளிலும் முன்னேறியது. ஆங்கிலேயராட்சி 1947இல் நீங்கவே பல நூற்றாண்டுகளாக அடிமைத்தளையில் அகப்பட்டுக் கிடந்த தமிழ் நாடு சுதந்திரம் பெற்றது.
2. சமய நிலை
நாயக்கர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்தில் இந்நாட்டின் பழம்பெருஞ் சமயங்களான சைவமும் வைணவமும் மக்களிடையே நல்ல வளர்ச்சியைப் பெற்றிருந்தன. இஸ்லாமியர்களின் ஆட்சியால் இஸ்லாம் இங்கு பரவியது. ஐரோப்பியர்களுடைய வருகையால் கிறிஸ்தவமும் இங்கு பரவியது. ஆங்கிலேயர் மக்களைக் கிறிஸ்தவர்களாக்கத் தலைப்பட்டவர். ஆட்சியின் ஆதரவும் அவர்களுக்கு இதுந்தது. இதற்கெனவே இங்கு வந்த ஐரோப்பியப் பாதிரியார்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை கிறிஸ்தன் சமயத்திற்கு மாற்றினார்கள். சமயமாற்றும் நிகழ்கின்ற பொழுது இருவருக்கிடையிலும் இருந்த மொழி மாறுப்பாட்டினை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மக்களின் அன்பைப் பெறுவதற்கு வழி, அவர்கள் மொழியைக் கற்று அவர்களோடு கலத்து வாழ்தலே என்பதை நன்கறிந்த இவர்கள் தமிழ் மக்களோடு கலந்து வாழ்ந்து தமிழ் மொழியைக் கற்று அம்மொழி வாயிலாகத் தங்கள் சமயக் கொள்கைகளை நஎட்டிற் பரப்பினார்கள். எத்தகைய இன்னல்கள் வந்துறபோதும் அவற்றிற்குச் சிறிதளவேனும் சலியாது தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்து உழைத்து வந்தமையால் கிறிஸ்தவ சமயம் அக்காலத்தில் தமிழ் நாட்டில் வளரலாயிற்று கிறிஸ்தவக் குருமார்கள் சமயத்திற்கு செய்து வந்த தொண்டு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற்றென்றோ கருதக் கிடக்கிறது. நாயக்கர் காலத்தில் தமிழ் நாட்டில் கால் வைத்த இஸ்லாமியர் தங்கள் ஆட்சியை பல இடங்களிலும் பரப்பினர். மேலும் பரவுதர்கேற் வாதிகள் அவர் ஆட்சிக்குப் பின் இல்லளமையால் அது வளர்ச்சியுராதிருந்த போதிலும் அம்மதத்தை தழுவிய மக்கள் அதனை சிறப்பாக போற்றி வந்தனர். மேற்கூறிய பிறநாட்டுச் சமயங்கள் தமிழ் நாட்டிற்கு வந்து மக்களுட் பலரை தம் வசப்படுத்திய போதும் இந்து சமயம் தளர்ச்சியுறவில்லை என்றே கூறலாம்.
ஐரோப்பியர் காலத்தில் உரை நடை இலக்கியம்
செய்யுள் நடையைப் போலவே உரைநடையையும் உணர்ச்சிபோடு கூடிய அலுபவங்களை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த கருவி என்பதை நம் முன்னேரகள் அறிந்திருந்தன) என்பதையும், அதனைப் பிரயோகித்துப் பல இலக்கியங்களை இயற்ரின என்பதையும் தொல்காப்பியத்திலிருந்து அறியலாம். தொல்காப்பியர் காலம் தொடக்கம் பதினேழாம் நூற்றாண்டு வரையும் உள்ள காலப்பகுதியில்| பெருவாரியாக உரைநடை இலக்கியங்கள் காணப்படாமையால், அக்காலப்பகுதிக்குரிய தமிழ் இலக்கிய வரலாறு செய்யுள் இலக்கிய வரலாறாகவே இருந்தது.
அக்காலத்தில் உரைநடை இகைகியங்கள் தோன்றவில்லை எனினும், உரைநடை சிறப்பாக வளரச்சிப்ப பெற்று வந்ததென்று அக்காலத்தில் இலக்கண இலக்கிய நூல்களுக்கெழுதிய உணரகளைக் கொண்டு அறியலாம். அவையாவும் கல்வியறிவுடையோர் படித்து இன்புறுவதற்கேற்ற உயரியநடையிலே தர்க்க முறையில் எழுருட்பட்டவை. செ.வரையர், பரிமேழைகர் முதலியோர் கையாண்ட உணரநடையை நோக்கும்
1.போது சிறந்த செய்யுள் நடையினை மட்டுமன்றி பாராட்டத்தருந்த உரைநடையினையும் தோற்றுவிக்க கூடிய ஆற்றலையுடையது தமிழ் மொழி என்பது தெரிகிறது.
பதினேழாம் நூற்றாண்டுக்கு முன் உரைநடை இலக்கியங்கள் தோன்றாமைக்கு சில காரணங்களைக் கூறலாம். அச்சியந்திரம் இல்லாத அக்காலத்தில் மக்கள் நூல்களை ஏடுகளில் எழுதியே படிந்து வேண்டியிருந்தது. நூல்களின் பிரதிகளைப் பெருக்குவதற்கு வசதிக்குறைவுகள் அக்காலத்தில் இருந்தமையால் பல நூல்களை மவனம் செய்து வைத்றிருக்க வேண்டிய அவரியம் ஏற்பட்டது. ஆகவே சொற்சுருக்கமும் பொருட் செறிவுமுள்ள செய்யுள் நடையைக் கையாள வேண்டியிருந்ததனாலயே புலவர்கள் தம் உணர்ச்சி அனுபவங்களைச் செய்யுள் நடையிலேயே அமைத்தனர். அச்சியந்திரம் வந்த காலத்தில் உரை நடை இலக்கியங்கள் பல்கத் தொடங்கின, அதனால் பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கம் உரைநடை இலக்கியங்கள் வளர்ச்சி பெற்றன.
ஐரோப்பியர்கால ஆரம்பத்திலே பல உரைநடை நூல்களை எழுதிய தத்துவபோதக சுவாமிகள் . வீரமாமுனிவர் என்ற இரு கத்தோலிக்க பெரியார்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர். தத்துவ போதக சுவாமிகள் பதினேழாம் நூற்றண்டின் தொடக்கத்தில் இந்தாலி தேசத்திலிருந்து மதுரைக்கு வந்து தமிழ் மக்கள் விரும்பத்தக்க ஒழுக்கமும் உடையும் பூண்டு மக்களோடு கூடி வாழ்ந்து தமிழ் மொழியைக் கற்று அம்மொழி வாயிலாக கத்தோலிக்க மதப்பிரச்சாரம் செய்து உரைநடை நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்கள் பின்வருமாறு
1. ஆத்தும நிர்ணயம்
2. கடவுள் நிர்ணயம்
3. தத்துவக் கண்ணாடி
4. இயேசு நாதர் சரித்திரம்
இலக்கண இலக்கிய அறிவிற் குறைந்தவர்களும் கற்றுணரக் கூடிய இலகுவான உரைநடையில் அவையாவும் எழுதப்பட்டுள்ளன.
இத்தாலி நாட்டிலிருந்து வந்து ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ் நாட்டிலே சமயத் தொண்டு செய்த வீரமாமுனிவர் தமிழ் மொழியையும் சுற்று தமிழின் அருமை பெருமைகளை ஐரோப்பியரும் கண்டு போற்றுதல் பொருட்டு இலத்தீன் மொழியிலே திருக்குறளை மொழி பெயர்த்து தமிழ் இலக்கண நூல் எழுதியும் தமிழின் சிறப்பினை எடுத்துக் காட்டினார். அதுமட்டுமன்றித் தமிழில்
1. வேத விளக்கம்
2. வேதியர் ஒழுக்கம்
3. வாமன் கதை
4. பரமார்த்த குகுகதை
முதலிய உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார்.
வாக்கியங்களில் வடசொற்களை அதிகமாக அமைத்து ஓசை நயம் ஒன்றினையே கருறி எழுதியதால் தத்துவ போதக சுவாமிகளின் உரைநடை இயற்கை முறையில் அமையவில்லை. வீரமாமுனிவர் எழுதிய வாமன் கதை, பரமார்த்தகுரு கதை முதலியவை உரைநடை இலக்கியங்களில் காணப்பட வேண்டிய சிறப்புக்களை கொண்டுள்ளன. தமிழ் உரைநடையில் முதன் முதல் எழுத்த அங்கத இலக்கியம் பரமார்த்த குரு கதை என்றே கூறலாம். நகைச்சுவை ததும்பும் கதை ஒன்றினைக் கூறும் வாயிலாகப் பாதிரிமாரையும் அவர்கள் செய்து வந்த காரியங்களையும் அந்நூலில் ஏளனம் செய்துள்ளார். அவர் கல்வியறிவிற் குறைந்த மக்களுக்கும் பொருள் புலப்படக் கூடிய முறையில் இலகுவான சொற்களைக் கையாண்டு உரை எழுதியுள்ளார். வேதியரொஜாகத்திலிருந்து எடுக்கப்பட்ட கீழ்வரும் அவர் உரைநடைக்கு ஓர் உதாரணமாகும்.
நீ அன்போடே சொன்னதை மற்றவரும் அன்பொடே கேட்பார். நீயே வேறே நோக்கமின்றி அவன் ஆத்துமப் பிரயோசனம் என்று கண்டால், கொடியனாயினும் பொருந்திக் கேட்பான்.”-
2.கல்வியறிவுடையோரும் படித்துப் பொருள் அறியக் கூடியவாறு உரைநடை அமைய பேண்டுமென்று கூறுவதால் தக்க முறையாக இலக்கிய வழக்குச் சொற்களும் இலக்கண அமைதியும் உடையதாய் இருத்தல் கூடாது என்பது கருத்தன்று எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருந்தக் கூடியதாக அதனைக் கையாளுதலே நக்கது. சாத்திர சம்பந்தமான விடயங்களைத் தெளிவுறுத்த வேண்டிய இடத்து அவற்றிற்கு பொருத்தமான சொற்களை தெரிந்து இலக்கணவரம்பு கடவாது நீர்க்க முறைப்படி கூறுதல் இன்றியமையாததாகின்றது. உணரச்சி சம்பந்தமான அலுபவத்தை புலப்படுத்த வேண்டிய இடத்துப் பேச்சுவழக்கில் உள்ள சொற்களைப் பிரயோகியாமல் விடல் முடியாது தான் எழுதுவதை சாதாரணக் கல்வியறிவுடைய மக்களும் படித்து இன்புற வேண்டும் என்ற எழுத்தாளன் பொருத்தமான நடையில் எழுதாவிடின் அவன் நோக்கம் நிறைவேற மாட்டாது. அதனால் வீரமாமுனிவரும் அக்காலத்து எழுத்து வழக்கில் இருந்த சொற்கள் பலவற்றை கையாண்டு உரைநடை இலக்கியங்கள் பலவற்றை எழுதியுள்ளார்.
இவ்வாறு தமிழ் உரைநடை பதினெட்டாம் நூற்றாண்டில் விருத்தியடைந்தற்குக் காரணமாய் இருந்தவற்றுள் குறிப்பிடத்தக்கவை இரண்டு
1. அச்சியந்திரம் 2. சமயப்பிரச்சாரம்
பாதிரிமாரும் சுந்தோலிக்கக் குருமாரும் தத்தம் சமயக் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் நோக்கமாகவே உரை நூல்களையும் நிருபங்களையும் எழுதி வெளியிட்டனர். அவற்றின் பிரநிகளை ஏராளமாகப் பெற்று மக்களுக்குக் கொடுத்தற் பொருட்டு தரங்கம்பாடி, அம்பலக்காடு முதலிய இடங்களில் அச்சியந்திரசாலையை அமைத்தனர். நூல்கள். நிருபங்கள். கண்டனங்கள் என்பவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்ட கத்தோலிக்கருக்கும் ஜாதர்சபையாருக்குமிடையே மூண்ட பகைமை காரணமாக எழுத்து வாதங்கள் நிகழ்த்தன. வீரமாமுவிவர் எழுதிய வேதவிளக்கத்திற்கு மறுப்பாக லூதரசபையின் எழுதிய 'திருச்சடைப்பேநகம்' என்ற கண்டன நூல் வெளிவந்தது. அந்தூனிற்கு மறுப்பாகப் “பேதகம் மறுத்தல்" . “ஐந்தர் இனத்தியல்பு" என்ற நூல்கள் இரண்டினை வீரமாமுனிவர் வெளியிட்டார். கிறிஸ்தவ மதப்பிரசாரங்கள் இந்து சமயத்தை ஓரளவிற்குத் தாக்கியமையால் அவற்றிற்கு மாராாய் "ஏகமததிராகரணம்’ முதலிய கண்டன நூல்களைச் சைவர்கள் வெளியிட்டனர். இத்தகைய மதர் கண்டன வெளியீடுகள் தமிழ் உரை நடை விருந்திற்குப் பெரிதும் பயன்பட்டன காலத்திற்கேற்ற வகையில் உரைநடையும் வரைந்து செல்வதாயிற்று
இந்தசற்றாண்டிலே தமிழ் உரைநடை ஒரு புது வழியில் வளரத்தொடங்கிய போதும் முற்காலத்து உரையாசிரியர்கள் கையாண்ட டயரிய நடையைப் பின்பற்றிப் பல உவரநூல்களை எழுதிய உரை நூலாசிரியர்கள் சிலகும் இக்காலத்தில் இருந்தனர். அவர்களுள் சிவஞான முனிவர் சிறப்பினராக குறிப்பிடத்தக்கவர். தருக்கம், சமயசாத்திரம், இலக்கியம், இலக்கண முதலிய பல துறைகளிலும் இந்நூற்றாண்டில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கிய பெரியார் அவர். காஞ்சிப்புராணம் முதலிய செய்யுள் இலக்கியங்களை இயற்றியதோடு,
1. இலக்கண விளக்கச் சூறாவளி 2. சித்தாந்த மரபு கண்டன கண்டனம்
முதலிய கண்டன நூல்களையும் தொல்காப்பிய சூத்திரவிருந்தி முதலிய ஆராய்ச்சி நூல்களையும் "திராவிட மாபாடியம்" என்னும் சிவஞான்போதப் பேருரையும் இயற்றினார். தாம் எடுத்துக் கொண்ட பொருளை படிப்போர் மனத்திற் பதியுமாறு தர்க்க முறையாக அமைத்துக் காட்டும் ஆற்றலும், மீறர் எளிதில் அறிந்து கொள்ள முடியாத விடயமாயிலும் அதனைத் தெளிவாக விளக்கும் நிறனும் சிவஞான முனிவருக்கு உண்டு என்பதை அவர் மடரைநடையை நோக்கி அறியலாம். பொருட் செறிவுடைய அவர் வாக்கியங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கம்பீரமாகர் செல்லும் பண்பினையுடையன, அவர் இயற்றிய உரைநடைக்க எடுத்துகாட்டுவருமாறு
* இனிக் குடத்தையும் அதனை வகையுங் குமலனையும் ஓரிடந்து ஒருங்கு கண்டான் அல்லூழிக் குடத்தைக் கண்டு, இதுவும் வளைதற்கு
3
ஒரு கருத்தாவையுடைத்தன அலுமித்துவர்வது போல இவ்வுலகம் படைத்தற்கு ஒரு கருந்தா வுண்டென வழியளவையான் உணர்தற்குமுன் ஓருலகத்தையும் அதனைப் படைப்பாவொடு கடுவுளையும் ஒருங்கு கண்டதின்மையின் அவிநாபாவமறிதல் கூடாமையான் அனுமானமே சணிடைக்கேலா தொன்றாய்,
தமிழில் உரைநடை இலக்கியம் பதினெட்டாம் நுற்றாண்டின் முற்பகுதியில் ஆரம்பித்த போதும் அது விரைவாக வளரத் தொடங்கிய லம் பத்தொன்பதாம் நுற்ராண்டு என்றே கூறலாம் தமிழ் நாட்டில் ஆங்கிலக் கல்வி விருத்தியே அதற்கு காரணமாகும்.
ஆங்கிலம் சுற்ற ஆசிரியர் பலர் ஆங்கில உரைநடை இலக்கியங்களைத் தழுவித் தமிழ் உரைநடை
இலக்கியங்களை இயற்றமுற்பட்டவர். அதனால் நாவல்கள், கட்டுரைகள், சுதைகள் ஆராய்ச்சி நூல்கள்
இன்னோரன்ன பல உரைநடை நூல்கள் தமிழில் எழுந்தன.
தாண்டவராய் முதலியார், ஆறுமுகநாவலர், வேநதாயாம் பிள்ளை, வீரசாமிச் செட்டியார், ராஜமையார். சரவணப்பிள்ளை, சூரியநாராயண சாஸ்திரியர் ஆகியோர் பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை ஆசிரியர்களுட் சிறப்பினராக குறிப்பிடத்தக்கவர்களாவர்.
இக்காலத்தில் உரைநடை நூல்கள் பெருக வேண்டும் என்ற கருத்துடையோர் பலர் மக்களை வசிகரிக்கத் தருந்த இராமாயணக்கதை, பாரதக்கதை, அதிர்சத்திரன்கதை. நளன் கதை முதலியவற்றை எழுதி வெளியிட்டனர்
தாண்டவராய முதலியார் பஞ்சதந்திரக் கதைகளையும் வீரசாமி செட்டியார் விநோதரச மஞ்சரி என்ற நூலையும் எழுதினர். ஆங்கிலத்திலுள்ள 'அற்புதாம்பவக்கதைகளைத் தழுவித் தமிழில் தமிழில் எழுந்த கதை நூல்களுள் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம், கருணகத்தரி என்பனவும் சூரிய நாராயண சாஸ்திரியார் எழுதிய “மதிவாணன்' என்பதும் விஷேடமாக குறிப்பிடத்தக்கவை.
ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரிந்திரம், திருகோணமலைச் சரவணப்பிள்ளை எழுதிய "மோகனாங்கிர்"
என்பதும் ஆங்கிலத்திலுள்ள உரியற் கதைகளாகிய நாவல்களைத் தழுவி தமிழில் ஏழுதப்பட்ட
உரைநடை நூல்களாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரைநடை ஆசிரியர்களும் சிவஞான சுவாமிகள் ஒப்புயர்வற்று விளங்கியது பொலவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர் சிறப்புற்று விளங்கினார். தமிழ் இலக்கியம் வளர்ந்து வந்த வரலாற்றை நோக்கும் போது நாவலர் வாழ்ந்த காலம் தமிழ் உரைநடை விருத்திக்கு உரியகாளம் என்பது தெரிய வருகின்றது. நாவலர் காலம் பொது மக்களுக்கு சமய உணரச்சியை நியாய வழிகளால் ஏற்படுத்த வேண்டிய காலமாக இருந்தது. ஏவெனில் கிறிஸ்தவ சமயப் பிரசாரகர்கள் பெரும்பாலும் சைவசமய மக்களையே மதமாற்றம் செய்யத் தொடங்கினர்,
ஆகவே அம்மக்களுக்குச் சைவசமய உண்மைகளை எடுத்துக் காட்டுதலும் சமய ஆர்வத்தை உண்டாக்குநலும் இக்காலத்திலேயே பெரிதும் தேவைப்பட்டமையினால் அவர்களுக்கென எழுதப்படும் நூல்களிலும் பிறவற்றிலும் அவர்களுக்கு எழுதிப் புலப்படக் கூடிய ஒருதடையை வருத்துக் கொள்ளுதல் இன்றியமையாததாயிற்று அதனால், சிவஞான முனிவரைப் போல் அரிய செந்தமிழ் நடையைக் கையாளக்கூடிய ஆற்றல் தாவலருக்கு இருந்ததாயிலும் அவர் அதை விட்டும் பொதுமக்களுக்குரிய இலகுவான உரைநடை ஒன்றைக் கடைப்பிடிந்து அதை கையாள முன. அதனால் உரைநடை வரலாற்றில் ஒரு முக்கிய இடம் அவருக்கு அளிக்கப்படுகின்றது. அவர் எந்தெந்த வகையில் தமிழ் உரைநடையை பொதுமக்கள் இலகுவாக அறிந்து கொள்ளுதற்கு உரியதாக ஆக்கலாம் என்று ஆராய்ந்த செய்தப் பிரயத்தனங்களை யாவற்றையும் அவர் எழுதிய நூல்களிலும் கண்டனங்களிலும் பிறவற்றிலும் காணலாம்.
இலங்கையின் கல்விப் பிரச்சினைகளும் உலகமயமாதல்இ கோளமயமாதல் மற்றும் கல்வியில் சர்வதேச மயமாதல் காரணிகளின் தாக்கமும். - எஸ்.எஸ்.ஜீவன்
கோளமயமாதல்(புடழடியடணையவழைn) என்பதனை கிடென்ஸ்(1990) என்பவர் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகின்றார். “தொலைதூரங்களிலுள்ள இடங்களை இணைக்கின்ற உலகளாவிய சமூக உறவூ நெருக்கமடைவதனால் பல மைல் தூரத்திற்கு அப்பால் நிகழும் நிகழ்வூகள் உள்ள+ர் நிகழ்வூகளை வடிவமைக்கின்றன. இந் நடவடிக்கைகள் மறுபுறமாகவூம் இடம்பெறுகின்றன” கோளமயமாதலின் விளைவூகளால் பிரதேசமயமாதல் நிலையிலிருந்து கல்வியானது சர்வதேசமயமாதலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது உலக மாற்றங்களின் செறிவூஇ விரைவூஇ அவற்றின் விரிவூ என்பவற்றினால் நாடுகளிடையே திடீர் உட்பாய்ச்சல்களை ஏற்படுத்துகின்றன. உலக நாடுகள் உள்ளாந்தமாக தொழிநுட்பம்இ தொடர்பாடல்இ பொருளாதாரம்இ வாழ்க்கை வசதிகள்இ வாழ்க்கைப்பாணி முதலியவற்றில் எல்லைகளில்லா நிலைமைகளை அனுபவிப்பதற்கான காரணிகளின் தொகுப்பினைக் கோளமயமாதல் எனக் குறிப்பிடலாம்.
கல்வியில் சர்வதேசமயமாதல் (ஐவெநசயெவழையெடணையவழைn ழக நுனரஉயவழைn) என்னும் செயற்பாட்டின் வீச்சுக்குள் இன்று இலங்கையூம் உள்வாங்கப்பட்டுள்ளது. நடைமுறை உலகில் கல்வியில் சர்வதேசமயமாதல் தவிர்க்க முடியாததாயினும் இது பற்றிய வாதம் பிரதிவாதங்கள் கல்வியிலாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. அறிவூஇ தொழிநுட்பம் இவற்றால் ஏற்படும் புத்தாக்கம் சார்ந்த புதிய உலகப் பொருளாதார உருவாக்கமானது தற்காலத்தில் புவியியல் மற்றும் அரசியல் எல்லைகளைக் கடந்து ஒரே விதமான மானிட வாழ்க்கைப் பாணியினை நோக்கி நகர்த்துவதனை உணர முடிகின்றது.
உலகின் சமகாலக் கருத்து வினைப்பாட்டில் (னுளைஉழரசளந) 'கோளமயம்' என்பது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சமூகமும்இ கல்வியூம்இ பண்பாடும் பற்றிய மீள்சிந்தனைக்கு இதன் தாக்கங்கள் இட்டுச் செல்கின்றன. கோளமயத்தோடு இணைந்த எண்ணக் - கருக்களாக பின் - நவீனத்துவம்இ தொழில்நுட்ப முதலாளித்துவம் (வூநஉhழெ ஊயிவையடளைஅ) (ஐகெழசஅயவழைn ளுரிநச Hiபாறயல) உலகளாவிய பெருஞ் சந்தை புதிய வறுமைஇ கோள. வெகுசனப்பாடு (புடழடியட pழிரடயச) முதலியவை மேலெழுகின்றன. பல்வேறு பிரச்சினைகளும்இ எழுநிலைகளும் (ஐளுளுரநள) கோளமயமாக்கலால் தோன்றியூள்ளன. இந்நிலையில் அடிப்படையான கருத்தியல் சார்ந்த தௌpவின்றிஇ "கோள நோக்கில் சிந்தியூங்கள்இ பிரதேச நோக்கில் செயற்படுங்கள்" என்ற சுலோகமும்இ "பிரதேச நோக்கில் சிந்தியூங்கள்இ கோளநோக்கில் செயற்படுங்கள்" என்ற சுலோகமும் உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சியையூம்இ உலகை நோக்கிய சந்தையின் விரிவால் ஏற்படக்கூடிய விரிவான இலாபமீட்டலையூம்இ விஞ்ஞான பூர்வமாக விளக்கிய கோட்பாடாக அமைந்த மார்க்சியம் அறிகை நிலையில் புதிய தரிசனத்தை வழங்கிய வண்ணமுள்ளது. உதாரணமாக 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்இ விரிவடைந்த வணிகம்இ முதலீடு என்பவை காரணமாக ஒவ்வொரு நாளும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பல நாட்டு நாணய வணிகம் இடம்பெற்றது.
கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; என்பது தொலைத்தொடர்புஇ போக்குவரத்துஇ தகவல் தொழில்நுட்பம்இ அரசியல்இ பண்பாடுஇ ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையூம் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையூம் கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; எனலாம். உலகமய சு+ழலில் ஒரு சமூகத்தின் அரசியல்இ பொருளாதாரஇ சமூகஇ பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வூகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வூதான்இ ஆனால் இன்றைய சு+ழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது. உலாக மயமாதல் இலங்கை போன்ற மூன்றாம் நாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியூள்ளது இது கல்வித்துறையிலும் பாரிய மாற்றத்தினையூம்இ கலைத்திட்ட மாற்றத்தினையூம் ஏற்படுத்தி வருவதனைக் காணலாம்.
கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்;இ கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல் ஆங்கிலத்தில் "படழடியடணையவழைn" என்ற கருத்துருவாக்கத்தின் தமிழ்ப்பதம் ஆகும். தமிழில் உலகமயமாக்கம் என்ற சொல்லும் சில வேளைகளில் "படழடியடணையவழைn" க்கு ஈடாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் அச்சொற்களின் பொருள் வேறுபாடு கவனிக்கத்தக்கது. கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; தானாக விரியூம் ஒரு செயல்பாடுஇ அல்லது அதை நோக்கிய ஒரு கருத்துப்பாடு. உலகமயமாக்கம் என்பது யாரோ அதன் பின்னால் இருந்து ஆக்குவதா பொருள் தொனிக்கின்றது. கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தத் தொடங்கியது 1981 ஆம் ஆண்டிலேயேயாகும். தியோடோர் லெவிட் (வூhநழனழசந டுநஎவைவ) என்பவர் எழுதிய சந்தைகளின் கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; (புடழடியடணையவழைn ழக ஆயசமநவள) என்னும் நூலில் கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; என்பது பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது. உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வூகளிலும்இ இது ஒரு பரந்தஇ அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக (phநழெஅநழெn) உணரப்பட்டது.
16ம் நூற்றாண்டு வரை ஆசியஇ ஆபிரிக்க நாடுகளில் அந்நாடுகளின் சுதேச கல்வி முறைகளே நீடித்தன. இக்காலகட்டத்தில் பெரும்பாலும் அனைத்து நாடுகளும் தமது அண்டைய நாடுகளுடனே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டன. புவியியல் மற்றும் இயற்கைத்தடைகளைத் தாண்டிய தொடர்பு கொள்ளலுக்கான போதிய தொழிநுட்பம் வளர்ச்சியடையாமையால் இந்நிலை காணப்பட்டதெனலாம். இக்காலகட்டத்தின் பிற்பகுதியில் ஆரம்பமான குடியேற்றவாத முயற்சிகளே பிரதேசம் தாண்டிய கோளமயமாதல் செயல்முறையின் ஆரம்பமாக அமைந்தது.
பிரான்ஸ்இ ஸ்பெயின்இ போர்த்துக்கல் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆசியஇ ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளைக் கைப்பற்றி தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இச்செயற்பாடுகளுக்கு ஆதரவான மனித வள உருவாக்கம்இ கலாசார மாற்றம் என்பவற்றை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஆயூதமாகச் சமயத்தினையூம் கல்வியினையூம் பயன்படுத்தின. குடியேற்ற நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தமையாலும் குடியேற்றவாதக் கல்விக் கொள்கைகள் விரிவடைந்தமையாலும் குடியேற்ற நாடுகளின் சுதேச கல்வி முறைகள் நலிவடைந்தன. இக்காலகட்டத்தில் உலக நாடுகள் அனைத்திலும் ஏறத்தாழ ஒரே வகையான கல்வி முறையானது மறைமுகமாக ஆரம்பமானதெனலாம். இரண்டாம் உலகப்போர் வரை இந்நிலை தொடர்ந்து விரிவடைந்தது. இக்கால கட்டத்திலே சுதேச கல்வி முறைகள் நலிவடைந்ததுடன் சுதந்திரத்திற்கான மக்கள் போராட்டங்களும் குடியேற்ற நாடுகளில் முகிழ்த்தன.
குடியேற்றவாதக் கல்வி முறை காரணமாக குடியேற்ற நாடுகளில் பின்வரும் விளைவூகள் ஏற்பட்டன.
பாரம்பரியமாக இருந்து வந்த முறைசார் கல்வி முறைகள் சிதைவடைந்தன.
தற்போதைய கல்வி முறைக்கு அடிப்படையான முறைசார் கல்வி முறை வியாபித்தமை.
அரச உத்தியோகத்தர்களை உருவாக்கும் பொறிமுறை கல்வியினூடாக முன்னெடுக்கப்பட்டமை.
குடியேற்றப் பேரரசுக்கு விசுவாசமான புத்திஜீவிகளது உருவாக்கம்.
ஐரோப்பிய மொழிகள்(ஆங்கிலம்) கல்வியில் முக்கியம் பெற்றமை.
ஜரோப்பிய சமயங்கள் ஆதிக்கம் பெற்றமை.
மேற்கைத் தேசத்து கல்விச் சிந்தனைகளும்இ தத்துவங்களும் குடியேற்ற நாடுகளின் கல்வியில் உட்புகுந்தன.
மேற்கத்தைய நாடுகளில் மீத்திறன் மிக்க மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்பு
மேற்கத்தைய கலாசாரப் பண்புகள் கொண்ட சமூகம் உருவானமை. (மேற்கத்தைய கலாசாரம் ஏனையவர்களிடமும் ஆரம்பித்தமை)
இரண்டாம் உலகப் போரின் பின்னர் குடியேற்ற நாடுகள் பல சுதந்திரப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியூம் கண்டன. சுதந்திரத்தின் பின்னர் இந்நாடுகள் பல மீண்டும் சுதேச கல்வி முறைக்கு மீளவூம் பாரம்பரிய கலாசாரங்களை வளர்த்தெடுக்கவூம் முயன்றன. எனினும் குடியேற்றவாத கால மேம்பட்ட வகுப்பினரது எதிர்ப்புக்களுக்கு சுதேச அரசுகள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. (இந்நிலை இன்று வரை தொடர்கின்றது) இந்தக்கள நிலையானது கோளமயமாதல் காரணமாக இன்றைய சர்வதேசமயமாதலுக்கான பலமான அத்திவாரத்தினை வழங்கியதெனலாம். (நவ காலத்துவப் பண்புகள் பலமடைந்தன)
வளர்ந்து வரும் நாடுகளுக்குஇ அதிகரித்த வாழ்க்கைத் தரத்தையூம்இ வளத்தையூம் கொண்டுவருகின்றது என்பதும்இ முதலாம் உலக நாடுகளினதும்இ மூன்றாம் உலக நாடுகளினதும் நிதி வளத்தைப் பெருக்க உதவூகிறது என்பதும் ஒரு வகையான நோக்கு. இது உலகமயமாதலைப் பொருளியல் மற்றும் சமூக அடிப்படையில் ஒரு விரும்பத்தக்க விடயமாகக் கருதுகின்றது. பிரதேச வாரியான ஒத்துழைப்பு அமைப்புக்கள் பல உருவாக்கப்பட்டமை.
Nயூவூழு – வட அத்திலாந்திக் ஒப்பந்தம்
நுஊ – ஐரோப்பிய பொதுச் சமூகம்
யேஅ – அணிசேரா நாடுகளின் அமையம்
யூளுஐயூN – தென்கிழக்காசிய நாடுகள் அமையம்
ளுயூசுஊ – தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான அமையம். முதலான அமைப்புக்கள் மூலம் ஏற்கனவே நிலவிய கல்விஇ பொருளாதாரஇ சமூகக் கட்டுமானங்கள் வலுவூ+ட்டப்பட்டன. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரதேசமயமாதல் நிலையிலிருந்து கோளமயமாதலுக்கான வாசல் திறக்கப்படுகின்றது.
இன்னொரு நோக்குஇ பொருளியல்இ சமூக மற்றும் சு+ழலியல் அடிப்படையில் உலகமயமாதலை எதிர்மறையானஇ விரும்பத்தகாத ஒரு விடயமாகக் கருதுகின்றது. இதன்படிஇ கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்;இ வளர்ந்து வருகின்ற சமுதாயங்களின் மனித உரிமைகளை நசுக்குகிறது என்றும்இ வளத்தைக் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு கொள்ளை இலாபமீட்டுவதை அனுமதிக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இவை தவிரப் பண்பாட்டுப் பேரரசுவாத (உரடவரசயட iஅpநசயைடளைஅ) நடவடிக்கைகளினூடாகப் பண்பாட்டுக் கலப்புக்கு வழி வகுப்பதும்இ செயற்கைத் தேவைகளை ஏற்றுமது செய்வதும்இ பல சிறிய சமுதாயங்கள்இ சு+ழல்கள் மற்றும் பண்பாடுகளைச் சிதைத்து விடுவதும் இதன் எதிர்மறை விளைவூகளாக எடுத்துக் காட்டப்படுகின்றன.
இலங்கை போன்ற மூன்றாம் நாடுகளிலே கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல் பின்வரும் பாதகமான விளைவூகள் ஏற்படுமென கோளமயமாக்கலுக்கான எதிர்க்கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
◦ நாடுகளின் இறைமைஇ அடையாளம் பற்றிய கரிசனை
◦ கலாசார தனித்துவம் சிதைவடைதல் - உலகளாவிய ஒரே கலாசாரப் பரவல்
◦ உள்ள+ர் வளங்கள் முக்கியத்துவமிழத்தல்ஃசமநிலையிழத்தல்.
◦ கலாசாரங்களின் புதிய கலப்பு நிலை
◦ தொழிநுட்பம்இ தகவல் தொழிநுட்பம் என்பவற்றில் மேல்நிலை பெற்றுள்ள நாடுகளின் மறைமுகமான மேலாதிக்கம் ஏனைய நாடுகளின் பொருளாதாரஇ அரசியல் சமநிலைகளில் தளம்பலை ஏற்படுத்தும்.
◦ மக்களின் வாழ்க்கை முறை நிச்சயமற்ற நிலைக்குள் தள்ளப்படும்.
◦ சுதேச நலன்கள் பாதிக்கப்படும்.
◦ புதிய கல்வித் தொழிநுட்பத்தினை வேகமாகப் பின்பற்ற வாய்ப்பற்ற மக்கள் குழாம் உருவாகி ஏனையவர்களால் சுரண்டலுக்குள்ளாக நேரிடும்.
கல்வியானது கோளமயமாக்கலிலிருந்து கல்வி சர்வதேசமயமாதல் கோளமயமாக்குதலின் விளைவூகளும் விசையூம் கல்வியில் சர்வதேசமயமாக்கலினைச் சாதகமாக்கியூள்ளதெனலாம். கோளமயமாதலின் அனுகூலமான விளைவூகள் நோக்கி இன்று உலக நாடுகளனைத்தும் விரும்பியோ விரு;பாமலோ கல்வியின் சர்வதேசமயமாக்கல் வீச்சுக்குள் தம்மை உட்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியூள்ளது. ‘கோளமயமாக்கலின் திறன்கள்’ சாதகமற்ற நிலையிலுள்ளவர்களுக்கு கல்வியைச் சர்வதேசமயமாக்கும் நடைமுறைகள் பயனுடையதாக அமையூம் எனவூம் இது நவீன கல்வியைச் சனநாயகப்படுத்த உதவூம் எனவூம் இதனை முன்வைப்போர் வாதிடுகின்றனர்” – (கிடென்ஸ் 2000)
இதனை எதிர்த்து வாதிடுவோர் எதிர்மறையான விளைவூகளையே தரும் என வாதிடுகின்றனர். எனினும் சர்வதேசமயமாக்கலால் உள்ளுர் கல்வி முறை செழுமையடையூம் என்னும் கருத்து வலுப் பெற்றே வருகின்றது. “கல்வியின் சர்வதேசமயமாக்கல் என்பது இரண்டாம் நிலைக்கல்விக்கு அப்பாலுள்ள கல்வியின் நோக்கத்திலம் செயற்பாட்டிலும்இ கல்வி வழங்குவதிலும் சர்வதேச மற்றும் பல்கலாசார அல்லது பூகோள பipமாணத்தினை ஒருங்கிணைக்கும் செயற்பாடாகும்” என நைட்(2004) என்பவர் குறிப்பிடுகின்றார்.
“கல்வியில் கோளமயமாக்கல் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் கல்வியின் கட்டமைப்புஇ நிதி மூலங்கள்இ கலைத்திட்டம்இ நிர்வாகம் என்பவற்றில் முனைப்பான சீர்திருத்தங்களை ஏற்படுத்தியூள்ளது” (கார்னோஸ் 2000இ யூனெஸ்கோ 2000) வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் கல்வி மீதான முதலீட்டிற்கான குறைபாடுகளால் கல்வியில் சர்வதேசமயமாக்கல் நடைமுறைகள் இந்நாடுகளில் இலகுவாக உட்புகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. உள்நாட்டு அரசியல்இ சமூகஇ பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொள்ளாது கல்வியின் விரைந்த சர்வதேசமயமாதல் வீச்சுக்குள் இழுபட்டு கல்வியை இறக்குமதி செய்யூம் அல்லது கடன் வாங்கும் நிலைக்கு வளர்முக நாடுகள் பலவூம் தள்ளப்பட்டுள்ளன.
ஆசிய நாடுகள் சில (சீனாஇ இந்தியாஇ இலங்கை மலேசியா) இதில் நன்மைகளைப் பெற்று வருகின்ற போதிலும் இலங்கையானது ஓர் நிச்சயமற்ற தளம்பல் நிலைமையினையே அனுபவித்து வருவதாக தோன்றுகின்றது. நாடுகளுக்கிடையேயான முகவர் நிறுவனங்கள்இ நன்கொடை வழங்கும் அமைப்புக்கள்இ கூட்டுத்தாபனங்கள்(யூனெஸ்கோஇ உலக வங்கி முதலியன) கோளமயமாதல் யெல்முறைகளையூம் கல்வி சர்வதேசமயப்படுத்தப்படுதலையூம் அங்கத்துவ நாடுகளிடையே வலியூறுத்தி வருவதனையூம் உதவி பெறும் வறிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உதவிக்கான நிபந்தனையாக இக் கொள்கைகளை விதிப்பதனையூம் காண முடிகின்றது. சர்வதேசமயப்படுத்தல் வழி நடைமுறைப்படுத்தப்படாத பாடசாலைகளுக்கான உதவிகளை உலக அமைப்புக்கள் இடைநிறுத்தியூள்ளன. இது தவிர இலங்கை போன்ற நாடுகளில் எதுவித இறுக்கமான கட்டுப்பாடுகளுமின்றி சர்வதேசப் பாடசாலைகள் ஸ்தாபிக்கப்படுகின்றன. கொள்கை வேறுபாடுகளின்றி இலங்கையில் ஆட்சியமைக்கும் கட்சிகளின் அரசுகள் இந் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றன.
சர்வதேசக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் உலகளாவிய ரீதியில் இச் செயற்பாடுகளை விரிவூபடுத்தி வருகின்றன. இதன் காரணமாக வளர்முக நாடுகள் தமது சுதேசக் கல்வி முறையிலும் கலைத்திட்டங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அனைவர்க்கும் கல்விஇ தரமான சமூக உருவாக்கத்திற்கான கல்விஇ விழுமியம் சார் கல்விஇ கல்வியில் சமவாய்ப்பு என்னும் அடிப்படை நியமங்களுக்கப்பால் கல்வியைச் சர்வதேசமயப்படுத்தல் என்னும் சவால் மிகுந்த செயற்பாடுகளையூம் முன்னெடுக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசுசாரா உயர்கல்வி மானியங்கள் ஆணைக்குழவினை அமைக்கும் நிலையூம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது. கல்வியில் இருமைத்தன்மையானது இலங்கையில் இதனால் புதிய வடிவம் பெற்றுவருகின்றது. அரச பல்கலைக்கழகங்களிலான நாட்டம் குறைவடைந்து வருவதனால் உயர் கல்விக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையூம் ஏற்பட்டுள்ளது. எல்லைகளற்ற கல்வி விரிவாக்கம் இலங்கையிலும் காலூன்றியூள்ளமையால் நிதி வெளிப்பாய்ச்சல்இ மூளைசாலிகள் வெளியேற்றம் என்பன தீவிரமடைந்து வருகின்றன. இதன் காரணமாகச் சில உடனடி நன்மைகள் ஏற்பட்ட போதிலும் எதிர்காலத் தீர்க்க தரிசனமற்ற பல பாதகமான விளைவூகளும் ஏற்படாம் எனக் கல்வியிலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கை போன்ற மூன்றாம் நாடுகளிலே கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்;இசர்வதேசமயமாதல் பண்பாட்டு மாற்றத்தினை அதிகரித்து வருவது பிரச்சினையாகும்
கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; பலமான மொழிஇ பண்பாட்டுஇ அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இன - மொழி - பண்பாட்டு அழிவூக்கு அல்லது சிதைவூக்கு இட்டு செல்வதாக சிலர் வாதிக்கின்றனர். இக்கூற்றில் உண்மையூண்டுஇ எனினும் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கூறுகளை இழக்காமல் கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையூம் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள முடியூம். அதாவது கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; இருக்கும் ஒன்றின் அழிவில் ஏற்படமால்இ இருக்கும் ஒன்றௌடு அல்லது மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்தலாகவூம் பார்க்கலாம். இலங்கையிலே தமிழ்இசிங்களம்இ ஆங்கில மொழிப்பாவனை முக்கியம் பெறுவதோடு தமிழர்இ சிங்களவர்இ கிறிஸ்தவர்இ முஸ்லிங்கள்இ பறங்கியர் போன்ற பல்லின சமூகம் வாழும்நாடாகையால் அவர்களின் பண்பாட்டு தாக்கங்களுக்கு ஏற்ற வகையில் கலைத்திட்டம் அமைக்கப்பட்டாலும் சர்வதேசஇ கோளமயமாதலினால் அவற்றுக்கிடையிலே சிதறல் நிலையே காணப்படுகின்றது.
இலங்கையிலே மூளைசாலிகள் வெளியேற்றம் நாட்டின் பெரும் பிரச்சினையாகவே அமைகி;ன்றது.
செல்வந்த நாடுகளில் உள்ள வாய்ப்புக்கள் வறிய நாடுகளில் உள்ள திறன் பெற்ற தொழிலாளர்களைக் கவருவதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்படுகின்றது. எடுத்துக் காட்டாகஇ பல்வேறு வறிய நாடுகளிலிருந்து பயிற்சி பெற்ற தாதிகள் வேலைக்காக ஐக்கிய அமெரிக்காவூக்கு வருகின்றனர். இதனால்இ புதிய வெளிநாட்டுத் திறனாளர்களைப் பெறுவதற்கு ஆப்பிரிக்காவூக்கு மட்டும் ஆண்டு தோறும் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவூ ஏற்படுகிறது. இது போலவே மூளைசாலிகள் வெளியேற்றத்தின் மூலம் இந்தியாவூக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளிலே மூளைசாலிகள் குறைவாகவே காணப்படுகின்ற போதுதிலும் அதில் பலர் அபிவிருத்தி அடைந்த நாட்டிற்குச் செல்கின்றார்கள். அதனால் கல்விதுறைகளும் அதற்கூடாக விஞ்ஞானிகள்இ மெய்யியலாளர்கள்இ கல்வியிலாளர்கள்இ கண்டுபிடிப்பாளர்கள்இ உளவியலாளர்கள்இ போன்றௌர்களை வளர்த்தெடுக்க முடியாமல் போய்விடுகின்றது. இலங்கையிலே மருத்துவம்இ பொறியியல்இ தொழிநுட்பம்இ விஞ்ஞானம் துறைக்கான மூளைசாலிகள் வெளிநா சென்று படித்துவிட்டு அந்த நாட்டிலையே வாழ்வதனைக் காணலாம்.
உலக நாடுகளைப் போலவே இலங்கையிலும் அரசுப்பள்ளிக்கும் தனியார் ஆங்கிலப் பள்ளிக்கும் இடையேயான வேறுபாடு மிக அதிகமாக விரிவடைந்து வருகின்றது.
உலகமயமாக்கலுக்கும் கல்விக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு. அரசுப்பள்ளிக்கும் தனியார் ஆங்கிலப் பள்ளிக்கும் இடையேயான வேறுபாடு மிக அதிகமாக விரிவடைந்து கூர்மையடைந்தது 1990க்குப் பிறகான இக்காலகட்டத்தில்தான். நடுத்தர வர்க்கம் தனியார் ஆங்கிலப் பள்ளிகளை நோக்கிய மிகப்பெரிய படையெடுப்பை நிகழ்த்தியதும் இக்காலகட்டத்தில்தான். தனியார் ஆங்கிலப் பள்ளியை நோக்கிய படையெடுப்பிற்கு மிக முக்கியக் காரணம் அங்கு பயிற்றுவிக்கும் மொழியாக ஆங்கிலம் இருப்பதேயாகும். இதைப்பற்றி பேரா.கிருஷ்ணகுமார் தனது முரண்பாடுகளிலிருந்து கற்றல் என்னும் நூலில் “ தனியார் ஆங்கிலப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவூஇ அவர்களை மேற்கு நாடுகளோடும் குறிப்பாக அமெரிக்காவோடு மிக இணக்கமான பண்பாட்டு உணர்வை ஏற்படுத்துகிறது. அதன் பொருட்டு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலகப் பொருளாதார மயத்திலும் இணக்கமான உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. ஆங்கிலம் மின்னணுத் தொடர்பியலில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாக விளங்குவதால் சமூகத்தில் சிறந்த பொருளீட்டும் வாய்ப்பாக ஆங்கில மொழியறிவூ பயன்படுகிறது. அதன் மூலம் பயனடைவோர் ‘உலகே ஒரு கிராமம்’ எனும் சித்தரிப்பில் மிக ஆவலாக உள்ளனர்”
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் கல்வித்துறையில் பெண்கல்வி தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்N;ட வருகின்றது.
இலங்கைஇ இந்தியா போன்ற அண்டைய மூன்றாம் உலக நாடுகளிலே சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியூம் பாலின சமத்துவம்இ சமநீதி மற்றும் சமன்நிலை என்று பார்க்கும்போது பெண்கள் இன்றளவூம் கல்விஇ சுகாதாரம்இ அரசியல் போன்ற அடிப்படை உரிமைகளுக்கும்இ பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் எதிராக போராட வேண்டிய நிலையிலேயே உள்ளதை அழுத்தமாகப் பதிவூ செய்கிறார். வரலாறு நெடுகிலும் எல்லாக் கலாச்சாரங்களிலுமே பெண்களின் உணர்வூகளும் உரிமைகளும் ஆணாதிக்க சமூகத்தின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அங்கீகரிக்கப்படுவதையூம்இ சாதி அல்லது இனத்தின் தூய்மையையூம் குடும்பம் என்ற அமைப்பின் கௌரவத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களாகவே பெண்களை இச்சமூகம் வளர்த்தெடுப்பதையூம் குறிப்பிடுகிறார். மேலும் மீண்டும் மீண்டும் பெண்களின் உடலை மையப்படுத்திய அரசியலை மையப்படுத்துவதன் மூலமாக பெண்களை அதிகாரம் அற்றவர்களாகவூம்இ ஆளுகைக்கு உட்பட்டவர்களாகவூம் வைத்துள்ளதோடு அதைப் பண்பாடுஇ கலாச்சாரம்இ சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களின் மூலமாக நம்ப வைத்துள்ளதையூம் பதிவூ செய்கிறார். பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து பெண்கள் மேம்பாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களும்இ யூக்திகளும் கூட ஆணாதிக்கச் சமூக நலன்களுக்கு கேடில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட சமூக விதிகளை மீறாமல் பார்த்துக் கொள்ளும்படியான வகையிலேயே உருவாக்கப்படும் சு+ழ்ச்சிகளையூம் கொண்டதாகவே நகர்ந்து செல்கின்றது.
இவ்வாறு சமூகப் பாலின பாகுபாடுகளின் காரணமாக சமூக மற்றும் குடும்ப வளங்களின் மீதான பெண்களின் கட்டுப்பாடுஇ பயன்பாடுஇ பங்கேற்பு மற்றும் முடிவெடுத்தல் போன்றவைகள் தொடர்பான உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; பெண்களின் நிலைமையை மேலும் நலிவடையச் செய்துள்ளது. இச்சு+ழலில் வளங்கள் மற்றும் சொத்துரிமையற்ற தொழில்நுட்பங்களை கற்றறியாத பெண்களின் மீது கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; வறுமையின் சுமையை அதிகப்படுத்தியூள்ளது எனக்கூறமுடியூம்.
பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெரும்பாலான தொழில்கள் போராடி சம்பளத்தை அதிகரிக்க முடியாத தொழில்களாகவூம்இ ஆற்றல் மிக்க தொழிற்சங்கபலத்தைக் கொண்டிராத தொழில்களாகவூம் காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக இலங்கையின் முன்பள்ளி ஆசிரியர் தொழிலைக் குறிப்பிடலாம். இது பெண்களுக் (வூசயனவைழையெட னழஅநளவiஉ சுழடந) இணைந்தது. முற்று முழுதாகப் பெண்களால் மட்டுமே இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை வேதனம் மிகவூம் குறைந்த தொழிலாக இது விளங்குகின்றது.
வர்க்க நிலைப்பட்ட சுரண்டலுடன் பால் நிலைப்பட்ட சுரண்டலும் இணைந்து செல்வதைக் காண முடியூம்இ பொருள்களை மீள் உற்பத்தி செய்வதிலே மேற்கொள்ளப்படும் சிக்கன நடவடிக்கைகள் (ஊழளவ நுககநஉவiஎநநௌள) போன்று மனிதவளத்தை மீள் உற்பத்தி செய்யூம் சிக்கன நடவடிக்கையில் பெண்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். அதே வேளை இல்லத்துக்கு வெளியில் குறைந்த வேதனத்துக்குத் தொழில் புரியூம் நிலை சமாந்தரமான இரண்டு வகையான சுரண்டலுக்குப் பெண்களை உள்ளாக்கிவிடுகின்றது. கோளமயமாக்கலால் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் பெண்களே அதிக தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். வறிய பெண்கள் கல்விச் செயல்முறையில் இருந்து இலகுவாக வெளிவீசப்பட்டு விடுகின்றனர். உலகமயமாக்கல் விரிவூக்கு முற்பட்ட இலங்கையின் பாரம்பரியமான கல்வியில் நிலவூடமைப் பொருளாதாரப் பண்புகளும்இ காலனித்துவப் பண்புகளும் கலந்த செயல்வடிவத்தைக் கொண்டிருந்தது.
போதைப்பொருள்இ சட்டத்துக்குப் புறம்பான பொருட்கள் வணிகம் கல்வித்துறையிலும் வளர்ச்சியை பாதிக்கலாயிற்று.
2010 ஆம் ஆண்டில்இ உலக போதைப்பொருள் வணிகம்இ ஆண்டொன்றுக்கு 320 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றதாக போதைப்பொருள்களுக்கும்இ குற்றச் செயல்களுக்குமான ஐக்கிய நாடுகள் அலுவலகம் அறிவித்துள்ளது. அத்தோடு உலக அளவில் 50 மில்லியன்களுக்கு மேற்பட்டோர் ஒழுங்காக எரோயின்இ கொக்கெயின்இ செயற்கைப் போதைப்பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான கடத்தல் தொழிலுடன் தொடர்புடைய வணிகங்களில் போதைப்பொருள் வணிகத்துக்கு அடுத்தபடியாக உள்ளது அழியூம் நிலையில் உள்ள உயிரினங்கள் தொடர்பான வணிகம் ஆகும். சில நாடுகளின் மரபுவழி மருத்துவத்தில் பல்வேறு தாவரங்கள்இ விலங்குகள் போன்றவற்றின் பல்வேறு பகுதிகள் பயன்படுகின்றன. இவற்றுள்இ அழியூம் நிலையில் உள்ள விலங்குகளான கடற் குதிரைகள்இ காண்டாமிருகங்கள்இ புலிகள் போன்றவற்றின் உடற் பாகங்களும் அடங்கும். இதனால்இ சட்டத்துக்குப் புறம்பாக இவ்விலங்குகளை வேட்டையாடுவதுஇ அவற்றின் பகுதிகளைக் கள்ளச் சந்தையில் விற்பது என்பது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.இலங்கையிலே அன்மையில் இவ்வாறான வனிகச்செயல்கள் இடம்பெற்றே வருகின்றது.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் கல்வித்துறையிலும் சரிஇ ஏனைய துறையிலும் சரி உறைந்து இறுகிய ஒருதலைப்பட்சமான வார்ப்புச் சிந்தனைகளை வளர்தல்இ போட்டியால் முன்னேறலாம் என்ற நம்பிக்கையை தனியார் நிறுவனங்களில் சேர்ந்து மாதாந்த ஊதியம் பெறும் கவர்ச்சியை ஊட்டுதல்இ தாம் தொழிற்படும் நிறுவனங்கள் எதிர் மானிடப் பண்புகளைக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு விசுவாகமாக இணங்கித் தொழிற்படுதல்இ சமூக நிரலமைப்பை ஏற்று இசைந்து செல்லல்இ மத்தியதர வகுப்பினருக்குரிய உளப்பாங்குகளைக் கட்டியெழுப்புதல்இ தீவிர மாற்றங்களை விரும்பாத சமநிலையில் இருக்க விரும்புதல்இ அநீதிகளை எடுத்துரைக்காது அடங்கிவாழ முனைதல்இ மௌனப் பண்பாட்டைப் பராமரித்தல் உன்னதமானது என்ற உளப்பாங்கைப் பராமரித்தல்இ ஒடுங்கிய சுயஇலாபங்களை நோக்கிய ஊக்கல் முனைப்புடன் தொழிற்படுதல்இ ஆக்கச் சிந்தனைகளுக்கு வளமூட்டாது பொறி முறையாகச் சிந்திக்குச் செயல்முறைகளுக்கு வலிவூ+ட்டுதல் முதலியவை காலனித்துவ நவகாலணித்துவ கல்வி முறைமையின் பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் கல்வித்துறையில் பள்ளிக் கூட முகாமைத்துவக் கட்டமைப்பில் நிலமானியப் பண்புகள் இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு கிராமத்துப் பாடசாலையின் அதிபர் அந்தக் கிராமத்து மேட்டுக்குடியினரைப் பிரதிபலிப்பவராக இருக்கும் பொழுதுதான் முகாமைத்துவத்தை இசைவூபட முன்னெடுக்க முடிகின்றது. ஆண்களும் பெண்களும் கலந்துகற்கும் கல்லூரிகளுக்கு ஆண்களே அதிபர்களாக இருப்பதற்கு பொருத்தமானவர்கள் என்று கருதப்படுதல் பெண்கள் ஆற்றல் குறைந்தவர்கள் என்ற நிலப்பிரபுத்துவப் பெறுமானங்களின் மீள வலியூறுத்தலாக அமைகின்றது.
நிலப்பிரபுத்துவக் கல்விமுறைமையின் இன்னொரு பரிமாணமாக அமைவது "ஒருபக்கத் தொடர்பாடல்" ஆகும். காலனித்துவ மற்றும் நவகாலனித்துவக் கல்வி முறை இந்த செயற்பாட்டினை மேலும் மீளவலியூறுத்தியது. அதாவது மாணவரிடமிருந்து முகிழ்த்தெழும் தொடர்பாடலுக்கு இங்கு முக்கியத்துவம் தரப்படுதல் இல்லை. மாணவர் அறிவின் நுகர்ச்சியாளராக இருப்பார்களேயன்றி அறிவின் உற்பத்திச் செயற்பாட்டிலே பங்கெடுக்காத நிலை ஒருவகையிலே ஒடுக்குமுறைக்குச் சாதகமாக அமைந்து விடுகின்றது.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் கல்வித்துறையிலே அறிவூக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் கல்விகற்றவர்இ கற்காதவர் எனும் ஏற்றத்தாழ்வூகளும் இலங்கை போன் நாகளிலே ஏற்பட்க்கொண்டு வருகின்றது. கோளமயமாக்கற் சு+ழலில் அறிவூ என்பது ஒரு பண்டமாக (ஊழஅஅழனவைல) மாற்றப்பட்டுள்ளது. அறிவூச் செயற்பாட்டில் ஈடுபடும்நிலையங்கள் பண்ட உற்பத்தி செய்யூம் "வேலைத்தலங்களாக" நிலை மாற்றம் பெறுகின்றன. வேலை நிலையங்களுக்குரிய இலாப மீட்டும் செயற். பாடுகள் அடிப்படை மனிதப் பண்புகளையூம்இ கூட்டுறவூ மனப்பாங்கையூம் எளிதில் நிராகரித்து சுயநலப் போக்குகளைத் தூண்டி விடுகின்றன. கோளமயமாக்கலின் விசைகள் கட்டணம் செலுத்திக் கற்கும் நடவடிக்கைகள் மீது அதீத ஊக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
வேலையை அடிப்படையாகக் கொண்ட கற்றல் (றுழசம டீயளநன டுநயசniபெ) என்ற எண்ணக் கரு ஒருபுறம் செயல் அனுபவங்களை உள்ளடக்கிய கற்றலையூம்இ மறுபுறம் வேலை உலகை நோக்கிய பெறுமானங்களை வலியூறுத்தும் கற்றலையூம் குறிப்பிடுகின்றது. நவீனசந்தைப் பொருளாதாரச் செயற்பாடு கல்வியை நலன்புரி (றநடகயசந) நடவடிக்கை என்ற மரபு வழிநிலையிலிருந்து மாற்றி சந்தையின் தேவைகளுக்குரிய கல்வியாக செயற்பட வைக்கின்றது. கல்வி வழங்குனரும் கல்வி பெறுனரும் சந்தைத் தேவைகளின் அடிப்படையாகவே தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். கட்டமைப்பு இசைவாக்கல் (ளுவசரஉவரசயட யனதரளவஅநவெள) என்ற பொருளாதார நடவடிக்கைகள் அணுகுமுறைகள் கல்விக்கென அரசு வழங்கும் நிதியை வெட்டிக் குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதன்காரணமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரும் பிரதிகூலம் எய்தியவர்களும் கல்வி நிராகரிப்புக்கு உள்ளாகும் நிலை பெருக்கமடையத் தொடங்கியூள்ளது. பொருளாதார நிலையில் அனுகூலம் பெற்றவர்களே கல்வி நிலையிலும் மேம்பாடு பெறுதல் மேலும் மேலும் வலுவூ+ட்டப்பெற்று வருகின்றது. குறைந்த உற்பத்திச் செலவூஇ குறைந்த விலையில் ஆற்றலுள்ளவர்களை வேலைக்கு அமர்த்துதல்இ சந்தையை உலகளாவிய நிலைக்கு விரிவாக்குதல் போன்ற செயற்பாடுகளைக் கொண்ட கோளமயமாக்கல் இன்றைய நிலையில் தமக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் கல்வி விசையாகவூம் (நுனரஉயவழையெட குழசஉந) விரிவடைந்துள்ளது. கைத் தொழிற்சாலை மனிதரைப்பற்றி என்ன புலக் காட்சி கொள்ளுகின்றதோ அத்தகைய ஒருபுலக்காட்சியை கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கல்விநிலையங்கள் தொழிற்சாலைகள் என்ற அணுகுமுறைகளுக்குள் கொண்டுவரப்படுகின்றன.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் பல்கலைக்கழகக் கற்கை நெறிகளிலும்இ பாடத்திட்ட ஆக்கங்களிலும் கம்பனிகளினது நேரடியான தலையீடு வலுப்பெறத் தொடங்கியூள்ளது. தமக்குத் தேவைப்படும் தொழில்களுக்குரிய ஆற்றல் மிக்கோரை உருவாக்குவதற்கு கம்பனிகள் பல்கலைக்கழகங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியூள்ளன. அனைத்துப் பட்டதாரிகளுக்கும் கம்பனிகள் பற்றிய நேர்க்காட்சிகளை உருவாக் கும் வகையில் கலைத்திட்டம் நெறிப்படுத்தப்படுகின்றது. புதிய பண்டங்களை உருவாக்குவதற்குரிய ஆராய்ச்சிகள்இ புதிய பொறிகளை வடிவமைப்பதற்குரிய ஆராய்ச்சிகள்இ நுகர்ச்சியாளரைச் சென்றடைவதற்குரிய புதிய அணுகுமுறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் முதலியவற்றை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழகங்கள் தூண்டிவிடவூம்இ உற்சாகமளிக்கவூம் படுகின்றன. உலக சந்தையின் விரிவாக்கத்தின் நேர்க்காட்சிகளை வளர்க்கும் நடவடிக்கைகளுள் ஒன்றாக "கோளமய வியாபார எழுத்தறிவூ" (புடழடியட டீரளiநௌள டவைநசயஉல) என்ற கல்விச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே தகவலும் தொடர்பாடலும் தொடர்பான தொழில்நுட்பவியல் (ஐஊவூ) முக்கியத்துவத்தால் சிதறல் ஏற்ப்பட்டு கல்வியின் வர்த்தகமயமாக்கப்பட்ட பண்பை புலப்படுத்துகின்றது. தகவல் சமூகத்தில் எவ்வாறு கற்றுக்கொள்ளல் என்ற விடயம் தொடர்பாக ஆய்வூகளை மேற்கொண்டவர்கள் தகவலும் தொடர்பாடலும் தொடர்பான தொழில்நுட்பவியல் (ஐஊவூ) என்ற இயலை உருவாக்கியூள்ளனர். கற்கும் தொடர்பாடல் இயல்புகளை மாற்றுதல்இ கற்றலுக்கான பல புதிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருதல் முதலியவை இந்த மயப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்ட புரட்சியாக தகவலும் தொடர்பாடலும் தொடர்பான நுட்பவியல் (ஐஊவூ) கருதப்படுகின்றது. நன்கு வழிப்படுத்தப்பட்ட முறையிலே தனியாள் ஒருவர் கற்றல் (Pரசஉhயளiபெ ருnவைள ழக டுநயசniபெ) என்று கூறப்படுகின்றது. (இந்தச் சொற்றொடரே கல்வியின் வர்த்தகமயமாக்கப்பட்ட பண்பை புலப்படுத்துகின்றது)
மேற்கூறிய கற்பித்தல் நடவடிக்கை கல்விக்கான செலவைக் கட்டுப்படுத்தும் உபாயமாகின்றது. கோளமயமாக்கலின் நேரடியான தாக்கம் கல்விக்கான ஆசிரியர் செலவூகளைக் குறைத்து கல்வி நிறுவனங்களின் இலாபமீட்டலை அதிகரித்தலுமாகும். தகவலும் தொடர்பாடலும் தொடர்பான நுட்பவியல் ஓர் ஆசிரியர் முன்னரிலும் கூடுதலான எண்ணிக்கை கொண்டவர்களான மாணவர்களுக்குக் கற்பிக்கக் கூடிய ஏற்பாட்டைச் செய்கின்றது. இந்த அனுகூலம் ஆசிரியர்களுக்குச் சென்றடையவில்லை. ஆசிரியர்களுக்குரிய கொடுப்பனவூகள் இந்நிலையில் சமாந்தரமாக அதிகரிக்கவில்லை இந்த நுட்பவியல் (ஐஊவூ) ஆள்புல எல்லைகளையூம் கடந்த வகையில்இ உலகளாவிய முறையில் கல்வியை முன்னெடுத்துச் செல்கின்றது. இணையத்தளங்களுக்குக் கட்டணம் செலுத்தி அறிவை நுகர்ந்து கொள்ளும் முறை வளர்ச்சியடைந்து செல்லல் கல்வியை நுகர்வோருக்குரிய செலவூகளை அதிகரிக்கச் செய்கின்றது. அனுகூலம் மிக்கோருக்கே தரமான கல்வி என்ற நடைமுறை மேலும் வலிமையாக்கப்படுகின்றது. கடன் அட்டைகளைச் செலுத்தியே இணையத்தளங்களில் அறிவை நுகர வேண்டியூள்ளது.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையோ இணைந்து பொருளாதாரப் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன. கோளமயமாக்கற் செயற்பாடுகளும்இ நவீன சந்தைப் பொருளாதாரமும் ஆபத்து (சுளைம) என்ற பாரம்பரியமான எண்ணக்கருவில் மாற்றங்களை ஏற்படுத்தியூள்ளன. முதலாளிகளுக் கிடைக்கும் இலாபம் ஆபத்தைத் தாங்குவதற்கான வெகுமதி என்பது பாரம்பரியமான பொருளாதார நிபுணர்களின் கருத்து. இன்று 'ஆபத்து' என்பது இலகுவாக நுகர்ச்சியாளர் மீது சுமத்திவிடப்படும் செயற்பாடாக மாறியூள்ளது. சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சிந்தனையாளர்கள் கல்விஇ மருத்துவம் என்ற மானிட சேவைத் துறைகளிலும் தீவிரமாக வலியூறுத்தத் தொடங்கியூள்ளனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வறுமைக்குரிய சுரண்டற் காரணிகள் மூடி மறைக்கும் அறிகைச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒடுக்கு முறைக்கும் வறுமைக்கும் உட்பட்டவர்கள் சோம்பேறித்தனம் (டுயணுல) உடையவர்கள்இ வேலை செய்யக் கூச்சப்படுபவர்கள் (றுழசம ளுhல) என்ற வாறான பெயர்சு+ட்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மேற்கூறிய கருத்தை வலியூறுத்துகின்றது.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே இலங்கையின் கிராமப்புறத்து வறிய மாணவர்கள் இந்த வீச்சினுள் கூடுதலாக ஆகப்பட்டுக் கொள்கின்றனர். பாடசாலை பற்றிய பாரம்பரியமான எண்ணக்கருவில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பாடசாலைகளையூம் தொழில் துறைகளையூம் நெருங்கிய இணக்கத். துக்குக் கொண்டுவருதல்இ வேலை உலகினுக்குப் பொருந்தக் கூடியதாகக் கல்வியைத் திறந்துவிடுதல்இ பாடசாலைகளுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்குமிடையேயூள்ள கூட்டிணைப்பை வளர்த்தெடுத்தல் என்றவாறு ஐரோப்பிய ஆணையம் முன்வைத்த (நுரசழிநயn ஊழஅஅளைளழைn (1995) வூநயஉhiபெ யூனெ டுநயசniபெ டீசரளளநடளஇ நுரசழிநயn ஊழஅஅளைளழைn) கோளமயமாக்கலின் விசைகளால் உலகம் தழுவிய கருத்துக்களாக இவை மாற்றப்படுகின்றன. "வீடும் (Hழஅந ளுஉhழழட டுiமௌ) துடு இன்று கம்பனியூம் பாடசாலையூம் என்ற இணைப்பாக (ஊழஅpயலெ ளுஉhழழட டுiமௌ) மாற்றப்பட்டுள்ளது. கம்பனிகளோடு கூடுதலான தொடர்புகளை வைத்திருக்கும் பாடசாலைகளே மேம்பட்ட செயற்பாடுகளைக் கொண்டவை என்ற படிமம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பெரும் பாடசாலைகள் ஏற்கனவே இந்நடவடிக்கைகளில் இறங்கிச் செயற்படத் தொடங்கிவிட்டன.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே கோளமயமாக்கலின் அழுத்தங்கள் கல்வி என்ற நிலையிலிருந்து பயிற்சி என்பதை (வூசiniபெ) நோக்கித் திரும்பியூள்ளது. தொழில்களை மத்தியாகக் கொண்ட கற்கை நெறிகள் பட்டப்படிப்பு மட்டத்தில் மட்டுமன்றி பட்டப்பின்படிப்பு மட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அறிவூச் சமூகம் (முழெறடநனபந ளுழஉநைவல) என்ற நவீன தொடர் குறித்த தொழிலுக்குரிய பயிற்சியைப் பெற்ற சமூகமாகவே கருதப்படுகின்றது. தொடர் கல்வி என்பது தொடர் தொழிலுக்குரிய கல்வியாக மாற்றப்பட்டு வருகின்றது. மாணவர் என்ற பழைய எண்ணக்கரு கைவிடப்பட்டு துணை வேண்டுனர் (ஊடநைவெள) என்ற புதிய எண்ணக்கரு முன்மொழியப்படுகின்றது. கற்றல் என்பது தனிநபர் ஒருவரின் நுகர்ச்சிச் செயற்பாடு என வலியூறுத்தப்படுகின்றது. கற்றல் சந்தை கற்கும் சமூகத்தின் குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் மயப்பட்ட கற்றலே யதார்த்தமான கற்றல் என்ற மாற்றத்துக்கு (ஊநசவகைiஉயவநன டுநயசniபெ டீநஉழஅநள சுநயட டுநயசniபெ)
அறிவதற்குக் கற்றல்இ அறிவூக்குக் கற்றல்இ மனநிறைவூக்குக் கற்றல்இ என்பவை புறந்தள்ளப்படுகின்றன. கற்கும் அறிவின் ஆழம் முக்கியமல்ல சான்றிதளே முக்கியம் என்பது வலியூறுத்தப்படுகின்றது சான்றிதழ் பித்து (ஊநசவகைiஉயவந ஆயnயை) வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை மானிடப்பண்பு பாடங்கள் மற்றும் கலைப்பாடங்களைக் கற்றுப் பட்டம் பெற்றவர்கள் வேண்டப்படாதவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். உயர்கல்விக்கான கொள்கைத் திட்டங்களை உருவாக்கும் பொழுது தனியார் உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்தவர்களின் மதியூரை. களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
உயர்கல்விஇ தொழில்நுட்பக் கல்விஇ தொழில் சார்கல்விஇ வாண்மைக்கல்வி முதலியவை வயது வேறுபாடின்றிஇ சமூக அந்தஸ்து வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் சமூகத்தின் தாழ்மட்டங்களில் உள்ளவர்கள் இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி கற்று மேலுயர முடியூம் என்று கூறப்படுவதிலே ஒரு பெரிய பெய்ம்மை உட்பொதிந்துள்ளது. உயர் பட்டங்கள்இ சான்றிதழ்கள் முதலியவற்றைப் பெற்றுக்கொள்வதற்குக் கல்விச் சந்தையிலே அதிக பணத்தைச் செலவூ செய்ய வேண்டியூள்ளது. இந்நிலையில் சான்றிதழ்களும் பட்டங்களும் பெறுதல் சாமானியர்களுக்கு நடைமுறையில் எட்டாதவையாகவே அமைகின்றன. பண வசதியூடையோரே இந்தப் பன்முகப்பட்ட அனுகூலங்களை அனுபவிக்கும் வளமான நிலையில் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டவேண்டியூள்ளது.
உற்பத்தி நிறுவனங்களின் வேகத்துக்குக் கல்வி நிறுவனங்கள் ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளன என்ற குற்றச்சாட்டும் நிறுவனங்களால் முன்வைக்கப்படுகின்றது. இதன் பொருட்டு கற்பிப்போரின் வினைத்திறன்களை அதிகரிப்பதற்கான திட்டம்இ (ளுவயகக னநஎநடழிஅநவெ Pசழபசயஅஅந) பட்டப்படிப்பின் பொருத்தப்பாட்டையூம் தரத்தையூம் முன்னேற்றுவதற்கான திட்டம்இ தர உறுதிப்பாட்டுத் திட்டங்கள் முதலிய பல திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் கூட்டுமொத்தமான பௌதிக வளங்கள்இ மனிதவளம்இ வருமான பங்கிட்டில் சமத்துவம்இ சுரண்டல் அற்ற சமூகத்தின் உருவாக்கம்இ யாதார்த்த நிலையில் தேசிய இனங்களின் முழுமையான பங்குபற்றல்இ முதலியவற்றைப் பரந்த நோக்கில்இ அணுகாது கம்பனிகளுக்கு உடனடியான அனுகூலங்களை ஏற்படுத்தக் கூடிய நோக்கங்களே உயர்கல்வியில் இலங்கையிலே அமுலாக்கம் செய்யப்படுகின்றன.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கலைத்திட்டங்களில் மேலைத்தேய கலாசாரத்தின் செல்வாக்கு படிப்படியாக ஊட்டப்பட்டுவருகின்றது. உதாரணமாக பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொடர்தொழில் ஆற்றுப்படுத்தற் சேவையில் (ஊயசநநச புரனையnஉந) பெரிய கம்பனிகளில் நுழைவூ உன்னதங்கள் பற்றி விளக்கப்படுகின்றதேயன்றிஇ இலங்கையின் மூலவளங்களின் பயன்பாட்டை முன்னெடுக்கும் தொழில்கள் பற்றியூம்இ சமூக நன்மைகளை முன்னெடுக்கும் தொழில்கள் பற்றியூம் விளக்குதல் வறிதாகவூள்ளது. ஆங்கில அறிவூக்கும் தகவல் தொழில்நுட்ப அறிவூக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம்இ இலங்கையின் வளம்சார் தொழில்களுக்கும் சமூக நீதிக்குமுள்ள தொடர்புகளுக்கு வழங்கப்படுவதில்லை.
இலங்கைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்மியம் (ஊழரளெநடடiபெ) முற்றுமுழுதாக மேலைத்தேய புலக்காட்சியினூடாக வளர்க்கப்படும் நிலையே காணப்படுகின்றது. தியானமும் ஆசனங்களும் கூட மேலைத்தேய நூல்களினுடான புலக்காட்சி வழியாகவே முன்னெடுக்கப்படுகின்றன. சீர்மியமேலைத் தேய அணுகுமுறைகளின் ஊடுருவல் ஏற்கனவே ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ஐவெநசஎநவெழைn) புதிய சிந்தனைகளைஇ புத்தாக்கம் தரும் கருத்துக்களைஇ முன்வைக்கும் ஒருபட்டதாரி மாணவன் சிறப்புச் சித்தியினை (ஊடயளள) பெறாது வெளிவீசப்படுவதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. அதே வேளை மேலதிக தேடல்களை மேற்கொள்ளாது வழங்கிய பாடக் குறிப்புக்களை அப்படியே மீள ஒப்புவிக்கும் திறன் கொண்டவர்கள் சிறப்புச் சித்திகளை ஈட்டி அவர்களே அறிவூ வழங்கலை முன்னெடுக்கும் வாரிசுகளாக நியமிக்கப்படுகின்றனர். இந்த இறுகிய கட்டமைப்பை பல்தேசிய கம்பனிகளும் உள்ளுர்க் கம்பனிகளும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியூள்ளன. பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் பொழுது அவர்கள் பரீட்சைகளிலே உயர்ந்த புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் நிரந்தர நியமனங்களை வழங்காது ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வேலையில் அமர்த்தப்படுகின்றனர். தொழிற்பாடுகளில் வினைத்திறன் காட்டப்படாதவிடத்து அவர்களின் சான்றிதழினைக் கருத்திற் கொள்ளாது வெளியேற்றப்படுகின்றனர். இது "அமர்த்துதலும் துரத்துதலும்" என்ற தொடரால் கோளமயப் பொருளாதாரத்திலே கூறப்படுகின்றது.
கோளமயமாக்கலின் நேர்விளைவூகளாக இன்று இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளும் இணைப்பு நிறுவனங்களும் திறக்கப்படுகின்றன. இவற்றுக்குச் சமாந்தரமாக சர்வதேசப் பாடசாலைகளைத் திறத்தலும் அதிகரிக்கத் தொடங்கியூள்ளது. கோளமயமாக்கற் செயற்பாடுகள் 1978 ஆம் ஆண்டில் இலங்கையில் உருவாக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகளுடன் விரிவாக்கம் பெறலாயின. இவற்றௌடு இணைந்த வகையில் ஆங்கிலமொழி மூலக்கல்வி காலனித்துவ ஆட்சிக்கால நிலையில் பெறப்பட்ட அந்தஸ்தை மீண்டும் ஈட்டத் தொடங்கியூள்ளது.
சர்வதேசப் பாடசாலைகளிலே கற்பதும்இ சர்வதேச இணைப்புப் பல்கலைக்கழகங்களிலே கற்பதும் சமூக உயர் அந்தஸ்தின் சின்னங்களாக மாறியூள்ளன. சர்வதேசப் பாடசாலைகள் இலண்டன் பரீட்சைகளுக்குரிய கலைத் திட்டத்தை உள்ளடக்கிச் செயற்படுவதனால்இ இந்தநாடு பற்றிய பரவலான அறிவைப் பெற முடியாத அன்னியமாதல் நிலைக்கு மாணவர்கள் மாற்றப்படுகின்றார்கள். இம்மாணவர்களே எதிர்காலத்தில் இலங்கையின் தலைமைத்துவப் பொறுப்புக்களைக் கூடுதலாகப் பெறும் வாய்ப்பைக் கொண்டுள்ளமையூம் குறிப்பிடத்தக்கது.
சர்தேசப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் செல்வாக்கு இலங்கையின் தேசிய கலைத்திட்டத்திலும் ஊடுருவத் தொடங்கியூள்ளது. வசதிமிக்க தேசிய பாடசாலைகள் ஏற்கனவே ஆங்கில மொழி ஊடகக் கற்கை நெறிகளை ஆரம்பித்துவிட்டன. ஆங்கிலமொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளிலே பயிற்சியூம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் மேட்டுக் குடியினருக்கே அனுகூலமாகவூள்ளது. அவர்களே ஆங்கில மொழிமூலத் தூண்டல்களைத் தமது இல்லங்களிலே வழங்கக்கூடிய நிலையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே தமிழ்இ சிங்களம்இ முதலிய தாய்மொழிகளிலே கற்கும் மாணவர்களிடத்துத் தாழ்வூச்சிக்கலை ஏற்படுத்தத் தொடங்கியூள்ளது. தாய்மொழி வழிக்கல்வி கற்றௌரின் உத்தியோக வாய்ப்புக்கள் ஒடுக்கப்படுதல் அவர்களிடத்து உளவியல் தாக்கங்களை மேலும் அதிகரிக்கச் செய்துவருகின்றது. தாய்மொழி கல்வியை விருத்தி செய்த இலங்கையின் பல்கலைக்கழகங்கள் இப்பொழுது ஆங்கில மொழி வழிக்கல்விக்குப் படிப்படியாக மாறத் தொடங்கியூள்ளன. எமது நாட்டில் தாய் மொழிவழிக் கல்வியை அமுல் நடத்தியமையில் விடப்பட்ட பாரியதவறுகளும் இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டப்பட வேண்டியூள்ளது. சிங்களம் தமிழ் முதலாம் தாய்மொழிவழிக் கல்வியை இலங்கையில் வளர்த்தெடுத்தவேளை இரண்டாம் மொழியாகிய ஆங்கிலத்தை வினைத்திறனுடன் வளர்த்தெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினால் ஆங்கில மொழியறிவூ வீழ்ச்சியடையத் தொடங்கியதுடன்இ ஆங்கில மொழி வாயிலாகப் பெறப்படத்தக்க அறிவூச் சுரங்கத்தை அணுக முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் "காலாவதியானவர்கள்" என்ற நிலைக்கு வந்துள்ளனர்.
உலகமயமாக்கலின் ஊடுருவல் இலங்கையின் பாலர்கல்வித்திட்டங்களில் இருந்து பல்கலைக்கழகப் பட்டமேற்படிப்புவரை பல நிலைகளில் வியாபித்துப் பரந்து வருகின்றது. பாலர் பாடசாலைகளில் தாய் மொழி வாயிலான இசையூம் அசைவூம் தொழிற்பாட்டுக்குப் பதிலாக ஆங்கில மொழிமூல பாலர் ஒத்திசைப் பாடலைக் கற்பிப்பதும்இ மேலைத்தேய ஆடைநியமங்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து ஆடுதலும் மேலான செயற்பாடுகளாக முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய அடையாளங்களும் பண்பாட்டு அடையாளங்களும் படிப்படியாகக் கைவிடப்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியூம் வளர்ச்சியூம் இடைநிலை மற்றும் உயர்நிலை மட்டங்களுக்கு நீண்டு செல்கின்றன. தேசிய அடையாளங்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்ல கவர்ச்சியற்ற நிலையென்ற தோற்றப்பாடு மேலெழுந்துள்ளது. அவ்வாறே தேசிய மொழி மூலக்கற்றல் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கவர்ச்சிகுன்றிய செயற்பாடாக இருப்பதுடன் கற்கும் மாணவரிடத்து உளவியல் நிலைப்பட்ட மனப்பாதிப்புக்களையூம் ஏற்படுத்தி விடுகின்றது.
கோளமயமாக்கலின் உளவியல் நெருக்கிடுகள் தனித்து ஆராயத்தக்கவை. தொழில்நுட்ப ஆற்றலில் மேலெழுந்த நாட்டினர் தொடர்பான உயர்நிலை (ளுரிநசழைசவைல) மனோபாவம் வளர்ச்சியடைந்து வருகின்றது. தொழில்நுட்ப ஆற்றலில் மேலுயர்ந்ததோரே மேலும் முன்னேறிச் செல்வதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமாகவூம் பரந்த அளவிலும் காணப்படுவதனால் உயர்நிலை மனோபாவம் தொடர்ந்து மீள வலியூறுத்தப்படும் வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன.
தொழில்நுட்ப அறிவிலும்இ பிரயோகத்திலும் பின்தங்கிய நாடுகள் பெருநிலைப்போட்டியை எதிர்கொள்ள முடியாதநிலை தோன்றியூள்ளது. அதிநுட்பம் வாய்ந்த தொழில்நுட்ப அறிவூ ஏகபோக உரிமையாக இருப்பதனால் மூன்றாம் உலகநாட்டு மக்களிடத்து தாழ்வூ உணர்ச்சி. யையூம் தாழ்வூச் சிக்கலையூம் ஏற்படுத்தி வருகின்றது. இது ஒரு வகையிலே ஒடுக்கு முறைக்கு உட்பட்ட கறுப்பு இனமக்களிடத்திலே தோன்றிய தாழ்வூச்சிக்கலுடன் ஒப்பிட்டு ஆராயத்தக்கது. கறுப்பின மக்களின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையிலே காணப்பட்டமைஇ தொழில்நுட்ப அறிவிலே அவர்கள் வெகுவாகப் பின்தங்கியிருந்தமை போன்ற காரணிகளுடன்இ ஒப்பு நோக்கி ஆராயூம் பொழுது சுரண்டலின் பரிமாணங்களை மேலும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
உலக சந்தைக்கு விடப்படும் பொருள்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு நடிகர்கள் நடிகைகள்இ விளையாட்டு வீரர்கள் முதலியோர் தெரிவூ செய்யப்படுவதுடன்இ குறித்த பல்தேசிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பங்குபற்றல் வேண்டும் என்ற தனியூரிமைப் பணிப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். இவ்வகையான வீரத்துவம் (Hநசழளைஅ) பெரும் விஞ்ஞானிகளுக்கோ கண்டுபிடிப்பாளர். களுக்கோ வழங்கப்படுவதில்லை. இவற்றினால் பாடசாலை மாணவர்களின் சிந்தனையூம்இ காட்டுருவாக்கமும் (ஆழனநடடiபெ) அறிஞர்களையூம்இ விஞ்ஞானிகளையூம் நோக்கித் திருப்பப்படுவதற்குரிய வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன.
அறிகை இடர்ப்பாடுஇ நடத்தை இடர்ப்பாடு முதலாம் உளவியல் நிலைத் தாக்கங்களைப் பாடசாலை மாணவர்கள் அனுபவிக்கத் தொடங்கியூள்ளனர். உள்ளுர் உணவூ வகைகள்இ உடை அணியூம் முறைமை தொழில்நுட்பம் முதலியவை தாழ்ந்தவை என்ற பண்பாட்டுத் தாழ்வூ மனப்பாங்கும். (ஊரடவரசயட ஐகெநசழைசவைல) மாணவரிடத்தே வளர்ந்து ஓங்கும் சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருகின்றன. தமது பண்பாடு தொடர்பான தாழ்ந்த மனப் படிமங்கள் மாணவர்களிடத்தே வளர்ச்சியடைகின்றன. தம்மிடம் ஏதோ குறைபாடு உள்ளது என்ற தாக்கங்கள் மேலெழுகின்றன. இதன் உச்சநிலை உளவியல் வளர்ச்சியாக தனிநபர் (Pநசளழயெட வூசயபநனல) உலக நுகர்ச்சிச் சந்தையில் மென்பானங்கள்இ ஆடைஅணிகலன்கள்இ அழகு சாதனப் பொருட்கள்இ தனிநபருக்குரிய போக்குவரத்து ஊர்திகள்இ வீட்டுப்பாவனைச் சாதனங்கள் பொழுது போக்குச் சாதனங்கள்இ முதலிய பொருட்களே மேலோங்கிய நிலையிற் காணப்படுகின்றன இவை உற்பத்தியை நோக்கித்திசை திருப்பாத செயலூக்கம் குன்றிய நுகர்ச்சியாளராக (Pயளளiஎந ஊழளெரஅநசள) மாற்றிவிடுதல் குறிப்பிடத்தக்கது. இதனை வேறு விதமாகக் கூறுவதானால்இ நுகர்வோர் 'ஊனமுற்ற' நுகர்ச்சியாளராகவே மாற்றப்படுகின்றார்கள்.
கோளமயமாக்கலின் இன்னொரு செயற்பாடுஇ பாரம்பரியமான பொருட்களைக் கொள்வனவூ செய்யாதுஇ சந்தைக்கு விடப்படும் புதிய பொருட்களை வாங்குகின்ற "புதிய நுகர்ச்சியாளரை" உருவாக்குதலாகும். பெருந்தொகைப் பணத்தை உள்ளிடாகக் கொண்ட நவீன தொடர்பாடல் உபாயங்களைப் பயன்படுத்தி இந்தப் புதிய நுகர்ச்சியாளர் உருவாக்கப்படுகின்றார்கள். நுகர்ச்சியாளர் உருவாதல் இல்லை - உருவாக்கப்படுதல் என்ற நிலைக்கு மாற்றப்படுகின்றார்கள். நுகர்ச்சி என்பது மனிதரின் தேவைகளுக்கும் முன்னேற்றத்துக்கும் என்ற நிலை மாற்றப்பட்டு "நுகர்ச்சி நுகர்ச்சிக்காக" என்ற ஒடுங்கிய பாதையினுரடாகச் செல்கின்ற அவலமான நிலை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. நுகர்ச்சியாளர் "பகுத்தறிவூடன் தொழிற்படுகின்றனர்" என்பது தலைகீழாக மாற்றப்பட்டு பதகளிப்புடன் (யூnஒநைவல) தொழிற்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பதகளிப்புக்கு உள்ளான நுகர்ச்சியாளரை ஒன்றிணைப்பதற்காக அதி உயர் சந்தைகள்இ நுகர்வோர் நகரங்கள்இ முதலிய விற்பனை நிறுவன அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நவீன விற்பனை நிறுவனங்களுக்குள் செல்வோரின் உளவியல் பதகளிப்பு மேலும் தூண்டப்படும் நிலையே காணப்படுகின்றது.
பாடசாலைகளுக்குக் கற்கவரும் மாணவரும் மேற்கூறிய நுகர்ச்சிப் பின்னணியில் உருவாக்கம் பெற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். ஆசிரியர் வழங்குவதை வாங்கும் நிலையில் இருக்கும் செயலூக்கம் குன்றிய (Pயளளiஎந) நிலையில் அவர்களது இயல்புகள் அமைந்திருத்தல் வியப்பானதன்று. அறிவை நுகர்ச்சிப் பொருளாகக் கருதும் மாணவர்கள்இ அதன் தெறித்தல் நிலை பலத்தையூம்இ பிரயோகத்தையூம்இ விளைவை ஏற்படுத்தும் பரிமாணங்களையூம் அறியத் தவறிவிடுகின்றனர். இது ஆற்றலின் வறுமைக்கு இட்டுச் செல்கின்றது.
அறிவை ஏற்றத்தாழ்வான முறையிலே கையளிப்பதற்கு கோளமயமாக்கல் வழியமைக்கின்றது. விற்பனைப்பண்டமாக கல்வி மாற்றப்பட்டுள்ளமை மேற்கூறிய செயற்பாட்டைத் துரிதப்படுத்துகின்றது. இந்நிலையில் பொருளாதார இருப்புஇ சமூக அந்தஸ்துஇ அரசியல்வலுஇ கல்வி வழங்கல் ஆகியவற்றுக்கிடையேயூள்ள தொடர்புகள் மேலும் வலுவடைகின்றன. இந்தப் பரிமாணங்களுக்கு ஏற்றவாறு ஒருவரது வாழ்க்கைக் கோலங்களும் உருவாக்கப்படுகின்றன.
கோளமயமாக்கலின் கல்வி சார்ந்த நன்மைகளை சிலர் சிலாகித்துப் பேசுதல் உண்டு. கல்விச் செயற்பாட்டிலும்இ அணுகுமுறைகளிலும் காணப்படும் சோம்பலை உருவாக்கும் நடவடிக்கைகள் உடைத்தெறியப்படுகின்றது. தரமேம்பாட்டுக்குக் கூடிய அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. கற்றல் கற்பித்தலிலே வினைத்திறன் முன்னெடுக்கப்படுகின்றது. புதிய கற்பித்தற் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புதிய மதிப்பீட்டு உபாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இணையத்தளங்கள் வாயிலாக புதிய அறிவூ உடனுக்குடன் கையளிக்கப்படுகின்றது. உலகம் என்ற பெரும்பொருள் "கோளமயக் கிராமம்" என்றவாறு சுருக்கப்படுகின்றது. மருத்துவத்துறையின் புதிய கண்டுபிடிப்புக்கள் மனிதவாழ்க்கை நீட்சியை முன்னெடுக்கின்றன. தொடர்பாடலின் வளர்ச்சி வீட்டின் உட்புற அறைகளுக்குள் உலகைக் கொண்டுவந்து விடுகின்றது. தர உயர்ச்சி கொண்ட சான்றிதழ்களை உருவாக்கும் நடவடிக்கைகளைக் கல்விநிலையங்கள் முன்னெடுக்கின்றன. படித்தவர்கள் தமது நாட்டின் ஆள்புல எல்லைகளைக் கடந்து உலகத் தொழிற் சந்தைக்குள் நுழைய முடியூம்இ என்றவாறு விதந்தும் புகழ்ந்தும் பேசலாம். இந்த அனுகூலங்களை சமூகத்தின் மேட்டுக்குடியினரே அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் அவலத்தை அவர்கள் சுட்டிக்காட்டுதல் இல்லை.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே புதிய செல்நெறிகளும்இ புதிய கல்விக்கான அடித்தளமும் உருக்கம் பெற்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது. புநநெசயட நுனரஉயவழைn ஆழனநசnணையவழைn Pசழதநஉவ (புநுஆ ) என்ற பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது இலங்கைச் சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களுடன் இணைந்ததாக பொதுக்கல்வியின் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன் பல்வகைப்படுத்தும். பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படும் ஆங்கிலம் மற்றும் கணிதம் போன்ற மூலோபாய பாடங்களுக்கு பெருமளவூ முக்கியத்துவம் கொடுக்கப்படும். க.பொ.த உயர்தரத்தில் தெரிவூகளை இந்தத் திட்டம் விரிவாக்கும். அந்தவகையில் மாணவர்கள் கலைஇ முகாமைத்துவம்இ விஞ்ஞானம்இ தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விப் பிரிவூகளில் இருந்து தமக்குப் பொருத்தமான பாடங்களை தேர்ந்தெடுக்கும் நெகிழ்வூத் தன்மையைக் கொண்டிருப்பர். ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான பாடவிதானங்கள் டிஜிட்டல் முறையில் கணனிகளுடாக பயன்படுத்தக்கூடியதாக விருத்திசெய்யப்படும். அதிகமாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளைச் சேர்ந்த சிறுவர்கள் மீதே கவனம் குவிக்கப்படும்.
' கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான சு+ழலை வியாபிப்பதில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இருந்தபோதிலும் அதிக அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடு என்ற ஸ்தானத்தை எட்டுவதற்கு ஒட்டுமொத்த ரீதியான கற்றல் வெளிப்பாடுகளை மேலும் முன்னேற்றவேண்டும். உயர் தரத்திலான பொதுக் கல்வி கட்டமைப்பானது 21ம் நூற்றாண்டின் தொழில் தேவைகளுக்கான கேள்வியை சந்திப்பதற்கு ஏற்ற வகையில் மாணவர்களை உருவாக்கும் என்பதில் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ' இந்த திட்டமானது (தரம் 1-5 வரையான) முன்பள்ளி மற்றும் (தரம் 6-13 வரையான) இரண்டாம் நிலைக்கல்வியைத் தொடரும் பாடசாலை மாணவர்களுக்கு பயன்தருவதாக அமையூம். தொழில்நுட்பக் கல்வி தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பாடசாலைகளிலுள்ள முகாமைத்துவ பணியாளர்களும் இந்த திட்டத்தினால் பயன்பெறுவர்.
கல்வித் துறையில் இலங்கையின் நீண்டகால பங்காளராக உலகவங்கி திகழ்கின்றது. உலக வங்கியினால் ஆதரவளிக்கப்படும் பாடசாலை கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வூசயளெகழசஅiபெ ளுஉhழழட நுனரஉயவழைn ளுலளவநஅ Pசழதநஉவ (வூளுநுP)திட்டமானது தரம் 1-11 ( வயது 6-16) வரையூள்ள மாணவர்கள் கல்வியை இடைவிடாது தொடரும் விகிதத்தை 87 சதவிகிதத்திற்கு அதிகமாக அதிகரிக்க உதவியூள்ளது. கற்றல் பெறுபேறுகள் தொடர்பான சுழற்சிமுறை ஒழுங்குகிற்கமைவான தேசிய மதிப்பீட்டு பொறிமுறையை அறிமுகம்செய்துள்ளது. அனைத்துவலயங்களிலும் உள்ள பாடசாலைகளின் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பதற்காக பாடசாலையை அடிப்படையாகக்கொண்ட முகாமைத்துவத்தை ஆரம்பித்துள்ளது. இதற்கு மேலதீகமாக கல்வி நிர்வாகத்தின் பரவாலக்கப்பட்ட படிநிலைகளின் திறன்களை வலுவாக்குவதற்கு கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திட்டமானது துணைபுரிந்துள்ளது.
'பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது நடுத்தரவருமானம் மற்றும் உயர் வருமானமுள்ள கல்விக் கட்டமைப்புக்களை உடையதான சர்வதேச தராதரத்திற்கு ஏற்புடையதாக முன்பள்ளி மற்றும் இரண்டாம் நிலைக்கல்விக் கட்டமைப்பை அரசாங்கம் நவீனமயப்படுத்துவதற்கு துணையாக அமையூம்.' என உலக வங்கியின் முன்னணி பொருளியலாளரும் செயலணித் தலைவருமான ஹர்ஸ அடுஷரூபனே தெரிவித்தார். ' பொதுக் கல்வி நவீன மயப்படுத்தல் திட்டத்தினால் ஆதரவளிக்கப்படும் முக்கிய முன்னுரிமைக்குரிய விடயங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொதுக் கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தல் ஆகியன கற்றல் வெளிப்பாடுகளின் முன்னேற்றத்திற்கும் மாணவர்களின் மத்தியில் உயர் சமூக உணர்வூபூர்வ திறன் வெளிப்பாடுகளுக்கும் வழிகோலும். ஆகவேதான் கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதோடு பல பிரச்சினைகளையூம் உருவாக்கிக் கொண்டே உள்ளது. அத்தோடு கல்வி இன்று பல்பரிமாக மாற்றம் அடைந்துள்ளது. உலகமயமாதல் தொடக்கம் கோளமயமாதல் ஏற்பட்டு அதற்ஊடாகவே சர்வதேச மயமாதல் இம்பெற்று பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியூள்ளது.
உசாத்துனைகள் நூல்கள்
1.கருணாநிதி.மாஇ 2008இ“கல்விச் சமூகவியல்இ குமரன் புத்தக இல்லம்இ கொழும்பு.
(பக்கம் 34- 89)
2.சுமதி.மஇ2012இ “ கல்வியியல் கட்டுரைகள்” சஐ;ஐ_ வெளியீட்டகம்.
3.ஊழடநஇ ஆ. (நன) (2000) நுனரஉயவழைnஇ ஞரயடவைல யனெ Hரஅயn சுiபாவளஇ டுழனெழn: சுழரவடநனபந குயடஅநச.
4.புனைனநசள (1998) வூhந வூhசைன றயலஇ Pடைவைல Pசநளள: ஊயஅடிசனைபந
5.துயசஎளைஇP (2001) வூhந யபந ழக டநயசniபெஇ டுழனெழn: முழபயn Pயபந.
6.டுலழவயசனஇ (1984) வூhந pழளவஅழனநசn உழனெவைழைnஇ ஆயnஉhநளவநச ருniஎநசளவைல Pசநளள: ஆயnஉhநளவநச.
Subscribe to:
Posts (Atom)